மென்பொருள் மேம்பாடு போட்டி புதுச்சேரி மாணவருக்கு வெண்கலம்
மென்பொருள் மேம்பாடு போட்டி புதுச்சேரி மாணவருக்கு வெண்கலம்
UPDATED : ஏப் 10, 2026 07:28 PM
ADDED : ஏப் 10, 2026 07:30 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி:
தேசிய அளவிலான மென்பொருள் பயன்பாட்டு மேம்பாடு போட்டியில், புதுச்சேரி மாணவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த அருண்குமார் மகன் சரண் யஷ்வந்த், 20. இவர், சென்னையில் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் நடந்த தேசிய அளவிலான திறன் போட்டியில் பங்கேற்றார்.
இதில் மென்பொருள் பயன்பாட்டு மேம்பாடு பிரிவில் கலந்து கொண்டு மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் பெற்றார்.
