sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்

பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்

பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்


UPDATED : நவ 16, 2024 12:00 AM

ADDED : நவ 16, 2024 10:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2024 12:00 AM ADDED : நவ 16, 2024 10:34 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை:
தமிழக அரசு பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியிருப்பதாவது:


கடந்த சட்டசபை தேர்தலின் போது, பகுதிநேர ஆசிரியர்களை, 100 நாட்களில் பணி நிரந்தரம் செய்வோம் என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. இந்த வாக்குறுதியை நம்பி பகுதிநேர ஆசிரியர்கள் தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்தனர்.

ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், தி.மு.க., அரசு பணி நிரந்தரம் செய்ய வில்லை. பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து போராடியும் அரசு கண்டு கொள்ளவில்லை. கடந்த, 13 ஆண்டுகளாக 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள், 12 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளத்துக்கு தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர்.

பகுதிநேர ஆசிரியர்களை வஞ்சிக்காமல் தமிழக அரசு பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இல்லை என்றால் அரசின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us