sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பயிர் கழிவுகள் எரிப்பவர்களை ஏன் சிறையில் அடைப்பதில்லை: உச்ச நீதிமன்றம் கேள்வி

/

பயிர் கழிவுகள் எரிப்பவர்களை ஏன் சிறையில் அடைப்பதில்லை: உச்ச நீதிமன்றம் கேள்வி

பயிர் கழிவுகள் எரிப்பவர்களை ஏன் சிறையில் அடைப்பதில்லை: உச்ச நீதிமன்றம் கேள்வி

பயிர் கழிவுகள் எரிப்பவர்களை ஏன் சிறையில் அடைப்பதில்லை: உச்ச நீதிமன்றம் கேள்வி


UPDATED : செப் 18, 2025 10:15 AM

ADDED : செப் 17, 2025 11:53 PM

Google News

UPDATED : செப் 18, 2025 10:15 AM ADDED : செப் 17, 2025 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வடமாநிலங்களில் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலையில், 'விதிமீறுபவர்கள் மீது ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படுவதில்லை' என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், 'ஒரு சிலரை பிடித்து சிறையில் அடைத்தால் தான், தவறு நிகழ்வது தடுக்கப்படும்' எனவும் ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளது.

பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் அறுவடை முடிந்ததும் பயிர்க் கழிவுகளை விவசாயிகள் பலர் எரித்து வருகின்றனர். இதனால், தேசிய தலைநகரான டில்லி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் புகை மண்டலம் சூழ்ந்து சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது. மூச்சுத் திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களும் ஏற்படுகிறது.

இதைத் தொடர்ந்து, பயிர்க் கழிவுகளை எரிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. எனினும், அந்த உத்தரவு இதுவரை முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே, பயிர்க் கழிவுகளை எரிக்கும் சம்பவங்கள் வடமாநிலங்களில் தொடர்கதையாக உள்ளன. இந்நிலையில், இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'சுற்றுச்சூழலை காக்க வேண்டுமெனில், அவ்வப்போது முறையிட்டு கொண்டே இருந்தால் போதாது. கடுமையான நடவடிக்கை அவசியம் எடுக்கப்பட வேண்டும்' என, தலைமை நீதிபதி கவாய் காட்டமாக கூறினார். இது குறித்து தலைமை நீதிபதி கூறியுள்ளதாவது: இந்த விவகாரத்தில் கடுமையான தண்டனை வழங்குவது பற்றி ஏன் சிந்திப்பதில்லை.

ஒரு சிலரையாவது பிடித்து சிறையில் அடைக்க வேண்டும். அப்போது தான் பயிர்க் கழிவுகளை எரிக்கக் கூடாது என்ற செய்தி அனைவருக்கும் சென்று சேரும். சுற்றுச்சூழலை உண்மையாகவே காக்க விரும்பினால், பயிர்க் கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு நிச்சயம் அபராதமாவது விதிக்க வேண்டும். அதை ஏன் செய்வதில்லை.

வேளாண் கழிவுகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த முடியும். அதை எரிப்பதற்கு பதிலாக எரிபொருளாக மாற்ற முடியும். இது பற்றி நான் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். அது குறித்து ஏன் கவனம் செலுத்துவதில்லை. இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.

மத்திய - மாநில அரசுகளுக்கு கெடு

குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில், டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், காற்று மாசு அதிகரிப்பதை தடுக்க சரியான திட்டத்தை மூன்று வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய - மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மாசு கட்டுப்பாட்டு வாரியங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாத காரணத்தினால் தான், காற்று மாசு அதிகரிக்கும் காலங்களில், சுற்றுச்சூழல் பாதிப்பை தடுப்பதற்கு போதிய மனித ஆற்றல் கிடைக்காமல் போகிறது. எனவே உ.பி., ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை மூன்று மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும்.
இதே போல் காற்று தர மேலாண்மை அமைப்பு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திலும் காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். காற்று தர மே லாண்மை அமைப்பு, மத்திய -மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் அடுத்த மூன்று வாரங்களுக்குள் காற்று மாசு தடுக்க தேவையான திட்டங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us