sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஊழல்வாதிகளின் சொத்துகளை பறித்து ஏழைகளுக்கு வழங்குவோம்: மோடி அதிரடி பேச்சு

/

ஊழல்வாதிகளின் சொத்துகளை பறித்து ஏழைகளுக்கு வழங்குவோம்: மோடி அதிரடி பேச்சு

ஊழல்வாதிகளின் சொத்துகளை பறித்து ஏழைகளுக்கு வழங்குவோம்: மோடி அதிரடி பேச்சு

ஊழல்வாதிகளின் சொத்துகளை பறித்து ஏழைகளுக்கு வழங்குவோம்: மோடி அதிரடி பேச்சு

14


UPDATED : ஏப் 15, 2024 05:41 PM

ADDED : ஏப் 15, 2024 03:58 PM

Google News

UPDATED : ஏப் 15, 2024 05:41 PM ADDED : ஏப் 15, 2024 03:58 PM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: ''மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைந்ததும் ஊழல்வாதிகளின் சொத்துகளை பறித்து ஏழை மக்களுக்கு வழங்குவோம்'' என கேரளாவில் நடந்த பிரசாரக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நேற்று மலையாள புத்தாண்டு தினமான விஷூ பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நல்ல நேரத்தில் கேரள மக்களின் ஆசிர்வாதங்களை பெற்றுள்ளேன். நேற்று பா.ஜ., தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை என்றால் மோடியின் உத்தரவாதம். மோடியின் உத்தரவாதத்தின் கீழ் இந்தியா உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மையமாக மாறும், விண்வெளித் துறையில் ககன்யான் போன்ற மறக்க முடியாத சாதனைகளை இந்தியா படைக்கும், விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் சம்மான் நிதி தொடர்ந்து கிடைக்கும்.

Image 1257530அதுமட்டுமல்லாமல் ஏழைகளுக்கு 3 கோடி புதிய வீடுகளும் கட்டப்படும், 70 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். சுயஉதவி குழுக்களுடன் தொடர்புடைய சுமார் 10 கோடி பெண்களுக்கு தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், சுற்றுலா மற்றும் சில்லறை வணிகம் ஆகிய துறைகளில் பயிற்சி அளிக்கப்படும். ஊழல்வாதிகளின் சொத்துகளை பறிமுதல் செய்து ஏழை மக்களுக்கு வழங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us