sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராகுல் பரப்பிய பொய்கள்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!

/

ராகுல் பரப்பிய பொய்கள்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!

ராகுல் பரப்பிய பொய்கள்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!

ராகுல் பரப்பிய பொய்கள்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!

13


ADDED : பிப் 03, 2025 05:14 PM

Google News

ADDED : பிப் 03, 2025 05:14 PM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ''கடந்தாண்டு டிசம்பரில் நான் அமெரிக்கா சென்றது குறித்து, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வேண்டுமென்றே பொய்யான தகவலை பரப்பி உள்ளார்,'' என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

ராகுல் கூறியதை மறுத்து ஜெய்சங்கர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் என் மீது வேண்டுமென்றே தவறான தகவலை பரப்பி உள்ளார். இந்த தவறான தகவல்கள், நம் நாட்டின் சர்வதேச மரியாதைக்கு பங்கம் விளைவிக்கும் என எச்சரிக்கிறேன்.

நான், அப்போது அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மற்றும் பைடன் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரைச் சந்திக்க சென்றிருந்தேன்.

மேலும், அங்கு நடந்த இந்திய தூதரகங்களின் தலைமை அதிகாரிகளின் கூட்டத்திற்கு தலைமை தாங்கினேன். நான் தங்கியிருந்த காலத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்னைச் சந்தித்தார். எந்த கட்டத்திலும் பிரதமருக்கான அழைப்பிதழ் பற்றி பேசப்படவில்லை.

நமது பிரதமர் இத்தகைய நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இத்தகைய நிகழ்வுகளில் இந்தியா சார்பில் சிறப்பு தூதர்கள் மட்டுமே கலந்து கொள்வது வழக்கம். ராகுலின் இந்த பொய்கள் அரசியல் நோக்கத்திற்காக இருக்கலாம். ஆனால் அவை வெளிநாட்டில் நமது மரியாதையைக் குலைக்கும்.இவ்வாறு ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us