பென்சன் திட்டம் பெயரில் இருக்கும் 'யு'வுக்கு அர்த்தம் இதுதான் என்கிறார் காங்., தலைவர் கார்கே!
பென்சன் திட்டம் பெயரில் இருக்கும் 'யு'வுக்கு அர்த்தம் இதுதான் என்கிறார் காங்., தலைவர் கார்கே!
UPDATED : ஆக 25, 2024 02:10 PM
ADDED : ஆக 25, 2024 02:04 PM

புதுடில்லி: பிரதமர் மோடியின் ஆட்சியிடம் இருந்து 140 கோடி இந்தியர்களை பாதுகாப்போம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியராக, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றியவர்கள் ஓய்வூதியத்திற்கு தகுதி பெறுவர். 10 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000 வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எக்ஸ் சமூகவலைதளத்தில் கார்கே வெளியிட்டுள்ள பதிவில், 'ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தில் இருக்கும் 'யு' என்பது, மோடி அரசின் பல 'யு டர்ன்'களை குறிப்பிடுகிறது. பிரதமர் மோடியின் ஆட்சியிடம் இருந்து 140 கோடி இந்தியர்களை பாதுகாப்போம்.
இன்டெக்சேசன் தொடர்பான பட்ஜெட் அறிவிப்பு, வக்பு மசோதாவை கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பியது, ஒலிபரப்பு மசோதா வாபஸ், லேட்ரல் என்ட்ரி வாபஸ், இப்போது ஒருமித்த ஓய்வூதியம் என அடுத்தடுத்து மத்திய அரசு தன் முடிவுகளில் இருந்து பின்வாங்கியுள்ளது. ஜூன் 4ம் தேதியன்று வெளியான முடிவுகள், மத்திய அரசின் அதிகாரத்தை வென்று விட்டன,'' என குறிப்பிட்டுள்ளார்.

