sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 எஸ்.ஐ.ஆர்., பணியில் மாணவர்கள்; கேரள அமைச்சர் எதிர்ப்பு

/

 எஸ்.ஐ.ஆர்., பணியில் மாணவர்கள்; கேரள அமைச்சர் எதிர்ப்பு

 எஸ்.ஐ.ஆர்., பணியில் மாணவர்கள்; கேரள அமைச்சர் எதிர்ப்பு

 எஸ்.ஐ.ஆர்., பணியில் மாணவர்கள்; கேரள அமைச்சர் எதிர்ப்பு


ADDED : நவ 26, 2025 06:35 AM

Google News

ADDED : நவ 26, 2025 06:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: ''வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில், பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துவதை ஏற்க முடியாது,'' என, கேரள பொது கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்துள்ளார்.

கேரளாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதையொட்டி எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மேற் கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், கேரள தலைமை தேர்தல் அதிகாரி சமீபத்தில் அளித்த பேட்டியில் எஸ்.ஐ.ஆர்., பணியில் பள்ளி மாணவர்களை தன்னார்வலர்களாக ஈடுபடுத்தலாம் என தெரிவித்திருந்தார்.

இ து தொடர்பாக, மாநில பொது கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி செ ய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

பள்ளியில் படிக்கும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் தேசிய மாணவர் படையினரை எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபடுத்துவதை ஏற்க முடியாது. அவ்வாறு ஈடுபடுத்தினால் மாணவர்கள் படிப்பு பாதிக்கும்.

வேலை நேரத்தில் மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது என கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது.

இவ்வாறு பள்ளி நேரத்தில் வேறுபணியில் மாணவர்களை ஈடுபடுத்துவது கல்வி உரிமையை மீறும் செயல். ஏற்கனவே 5,623 ஆசிரியர்கள், ஊழியர்கள் எஸ்.ஐ.ஆர்., பணியில் ஓட்டுச்சாவடி நிலை அதிகாரிகளா க ஈடுபட்டுள்ளனர்.

எனவே மாணவர்களுக்கு இதுபோன்ற பணியை தருபவர்கள் அவர்களுக்கு ஏற்படும் கல்வி தொடர்பான பாதிப்புக்கு பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us