sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மாணவி கர்ப்பம் சித்தப்பா கைது

/

மாணவி கர்ப்பம் சித்தப்பா கைது

மாணவி கர்ப்பம் சித்தப்பா கைது

மாணவி கர்ப்பம் சித்தப்பா கைது


ADDED : மார் 28, 2025 04:11 AM

Google News

ADDED : மார் 28, 2025 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடை சேர்ந்தவர் 10ம் வகுப்பு மாணவி. சில மாதங்களாக இவருக்கு மாதவிலக்கு வரவில்லை. இதை கவனித்த சிறுமியின் தாயார், மகளிடம் விசாரித்தார். அவரோ, தெரியாது என்று கூறியுள்ளார்.

மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளிடம் கேட்டனர்.

அப்போது, தாயின் தங்கை கணவரான சித்தப்பா நஞ்சுண்டசாமி, பள்ளிக்கு அழைத்து செல்வதாக கூறி, மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும்; இதை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து பெற்றோர், நஞ்சன்கூடு டவுன் போலீசில் புகார் அளித்தனர். 'போக்சோ' பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார், நஞ்சுண்டசாமியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இதற்கிடையில், மாணவியை தங்கள் பாதுகாப்பு மையத்தில், மகளிர், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் தங்க வைத்துள்ளனர்.

தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு நடந்து வருவதால், போலீஸ் பாதுகாப்புடன், நேற்று தேர்வு மையத்துக்கு மாணவி அழைத்து செல்லப்பட்டார்.






      Dinamalar
      Follow us