sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நடுவானில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; ஸ்ரீநகரில் 205 பயணிகளுடன் அவசர தரையிறக்கம்

/

நடுவானில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; ஸ்ரீநகரில் 205 பயணிகளுடன் அவசர தரையிறக்கம்

நடுவானில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; ஸ்ரீநகரில் 205 பயணிகளுடன் அவசர தரையிறக்கம்

நடுவானில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; ஸ்ரீநகரில் 205 பயணிகளுடன் அவசர தரையிறக்கம்

4


ADDED : ஆக 29, 2025 07:01 PM

Google News

4

ADDED : ஆக 29, 2025 07:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: டில்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு 205 பயணிகள் மற்றும் ஏழு பணியாளர்களுடன் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் பீதி அடைந்தனர்.

டில்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி, இன்று (ஆக.29) 4 குழந்தைகள் மற்றும் 7 பணியாளர்கள் உள்பட 205 பயணிகளுடன் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.

|

ஸ்ரீநகரை நெருங்கிய நேரத்தில், திடீரென விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார். தொடர்ந்து, மாலை 3.27 மணியளவில் அவசர அனுமதி பெற்று அந்த விமானம் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பீதி அடைந்தனர்.

பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்ட நிலையில், விமானத்தில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயணிகள் மற்றும் பணியாளர்கள் யாருக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை; பாதுகாப்பாக உள்ளனர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீப காலமாக விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது பயணியர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us