sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை சேர்க்கணுமா? தேர்தல் கமிஷனர் ஆவேசம்

/

வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை சேர்க்கணுமா? தேர்தல் கமிஷனர் ஆவேசம்

வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை சேர்க்கணுமா? தேர்தல் கமிஷனர் ஆவேசம்

வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை சேர்க்கணுமா? தேர்தல் கமிஷனர் ஆவேசம்

7


ADDED : ஜூலை 25, 2025 01:15 AM

Google News

7

ADDED : ஜூலை 25, 2025 01:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:“இறந்தவர்களையும், வெளிநாட்டினரையும் பீஹார் வாக்காளர் பட்டியலில் சேர்க்க அனுமதிக்க வேண்டுமா?,” என, எதிர்க்கட்சியினருக்கு தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

பீஹாரில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தலைமை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.

வா க்காளர் பட்டியலில் உரிய ஆவணங்களுடன் பெயர்களை சேர்க்கவும், நீக்கவும் இன்று கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சிறுபான்மையினர்களின் ஓட்டுகள் நீக்க வாய்ப்பிருப்பதாக அக்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்ற னர்.

இந்த விவகாரம் குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் நேற்று கூறியதாவது:

வாக் காளர் பட்டியல் என்பது ஜனநாயகத்தின் அடித்தளம். இதில், போலி வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களையும், வெளிநாட்டினரையும், இறந்தவர்களையும் சேர்க்க தலைமை தேர்தல் கமிஷன் அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி யினர் விரும்புகின்றனரா?

அத்தகைய வாக் காளர்களை தேர்தல் கமிஷன் நீக்க வேண்டாமா? வெளிப்படையான செயல்மு றை வாயிலாக, உண்மையான வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் தயாரிக்கிறது.

இது நியாயமான முறையில் தேர்தல்களை நடத்துவதற்கும், வலுவான ஜனநாயகத்திற்குமான அஸ்திவார கல். இதில், தவறு நேர அனுமதிக்கலாமா?-

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மோசடிக்கு ஆதாரம் உள்ளது: ராகுல்

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நேற்று கூறியதாவது: தேர்தல் கமிஷனுக்கு ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் தப்பிக்க முடியும் என நினைக்காதீர்கள். விரைவில் நாங்கள் உங்களைத் தேடி வருவோம். கர்நாடகாவில் ஒரு தொகுதியில் த லைமை தேர்தல் கமிஷன் மோசடியை அனுமதித்த தற்கு 100 சதவீத ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதை நாங்கள் உங்களுக்கு காண்பிப்போம். ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் அழிக்க முயற்சிப்பவர்கள் அதற்குரிய தண்டனையை நிச்சயம் பெறுவர். இவ்வாறு அவர் கூறினார். இதை மறுத்துள்ள தேர்தல் கமிஷன் அதிகாரிகள், 'ராகுலின் புகார் ஆதாரமற்றது; இது குறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்குமானால், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரை காத்திருங்கள். அதுவரை பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்ல வேண்டாம்' என, கூறியுள்ளனர்.








      Dinamalar
      Follow us