sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எங்கள் ஓட்டை திருப்பி தாங்க: நாங்கள் உங்க பணத்தை தருகிறோம்: பீகாரில் வினோதம்

/

எங்கள் ஓட்டை திருப்பி தாங்க: நாங்கள் உங்க பணத்தை தருகிறோம்: பீகாரில் வினோதம்

எங்கள் ஓட்டை திருப்பி தாங்க: நாங்கள் உங்க பணத்தை தருகிறோம்: பீகாரில் வினோதம்

எங்கள் ஓட்டை திருப்பி தாங்க: நாங்கள் உங்க பணத்தை தருகிறோம்: பீகாரில் வினோதம்

2


UPDATED : டிச 20, 2025 07:35 AM

ADDED : டிச 18, 2025 01:35 AM

Google News

UPDATED : டிச 20, 2025 07:35 AM ADDED : டிச 18, 2025 01:35 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா:எங்கள் ஓட்டை திருப்பி தாருங்கள்: நாங்கள் உங்கள் பணத்தை திருப்பி தருகிறோம் என ஆண் பயனாளர்கள் அரசுடன் போராடும் வினோத சம்பவம் பீகாரில் அரங்கேறி உள்ளது.

பீகார் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் நிதிஷ்குமாரின் கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மகளிருக்கு முன்னதாகவே வழங்கப்பட்ட உதவித்தொகை என கூறப்படுகிறது.

மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் 6-ம் தேதி முதற்கட்ட வாக்குபதிவு நடைபெற்றது. அதற்கு முன்னதாகவே செப்டம்பர் மாதம் 25-ம் தேதி பிரதமர் மோடி மகிளா ரோஜ்கர் யோஜனா என்னும் மகளிருக்கான உதவித்தொகை ரூ.10 ஆயிரம் வழங்கும் திட்டத்தை துவக்கிவைத்தார்.

அதே போன்று மாநிலத்தில் உள்ள தர்பங்கா மாவட்டம் ஜலே தொகுதி்க்கு உட்டபட்ட பகுதிகளில் ஆண் பயனாளர்களுக்கும் இது போன்று பணம் வரவு வைக்கப்பட்டது. தற்போது அரசு தரப்பில் இருந்து தொழில் நுட்ப கோளாறு காரணமாக பணம் ஆண்களுக்கு வழங்கப்பட்டதாக கூறி பணத்தை திருப்பி தருமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆண் பயனாளிகள் அரசு கூறியபடி தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிந்த பட்சத்தில் பணம் செலுத்திய சில நாட்களிலேயே அது குறித்து எங்களுக்கு தகவல் அளி்த்திருக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு பின்னர் தேர்தல் நடந்து முடிந்த பிறகு ஏன் பணத்தை திரும்ப கேட்க வேண்டும்.

எங்கள் ஓட்டுகளுடன் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவர்கள் பணத்தை திரும்ப கேட்கிறார்கள். பணத்தை கொடுத்த மூன்று மாதங்களுக்கு பிறகு அரசு தொழில் நுட்ப கோளாறை ஏன் கண்டறிந்தது என கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஒரு சில பயனாளிகள் அவர்கள் எங்களுக்கு பணம் கொடுத்தார்கள். நாங்கள் அவர்களுக்கு எங்கள் ஓட்டுக்களை வழங்கினோம். கணக்கு தீர்ந்து விட்டது. நீங்கள் எங்கள் வாக்கைத் திருப்பித் தந்தால் உங்கள் பணம் ரூ.10 ஆயிரத்தை நாங்கள் திருப்பித் தருவோம் .

பணம் பெற்ற பயனாளிகள் பெரும்பாலானோர் ஏழைகள் என்பதால் , அரசு அளித்த பணத்தை கொண்டு அவர்கள் துணிகள் மற்றும் வீட்டு பொருட்கள் வாங்குவதற்காக செலவிட்டுள்ளனர் என்றும், பணத்தைக் கொடுத்து மூன்று மாதங்களுக்குப் பிறகு ஏன் கேட்க வேண்டும் என கேள்வி கேட்டுள்ளனர்.

மாநிலத்தில் அரசு பயனாளிகளிடம் பணத்தை திரும்பப கேட்டுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us