sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திரும்பத் திரும்ப பழி சுமத்தும் ராகுல்; அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியது தேர்தல் கமிஷன்!

/

திரும்பத் திரும்ப பழி சுமத்தும் ராகுல்; அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியது தேர்தல் கமிஷன்!

திரும்பத் திரும்ப பழி சுமத்தும் ராகுல்; அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியது தேர்தல் கமிஷன்!

திரும்பத் திரும்ப பழி சுமத்தும் ராகுல்; அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியது தேர்தல் கமிஷன்!

22


ADDED : ஆக 01, 2025 05:53 PM

Google News

22

ADDED : ஆக 01, 2025 05:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஓட்டுக்கள் திருடப்படுகிறது என மீண்டும் மீண்டும் பழி சுமத்தி வரும் ராகுலுக்கு, தேர்தல் கமிஷன் கடும் பதிலடி கொடுத்துள்ளது.

மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் இருந்தே, தேர்தல் கமிஷன் மீது காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். குறிப்பாக, ஓட்டுக்கள் திருடப்படுகிறது. என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று கூறி வருகிறார். தற்போது அவர் பீஹார் மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி, அவர் மஹாராஷ்டிராவை போல் பீஹாரிலும் தேர்தல் முறைகேடு நடப்பதாக பலமுறை குற்றம் சாட்டி உள்ளார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, ராகுலுக்கு தேர்தல் கமிஷன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:

1. தேர்தல் கமிஷன் ராகுலுக்கு ஜூன் 12ம் தேதி, 2025ம் ஆண்டு அன்று ஒரு மின்னஞ்சல் அனுப்பியது. அவர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

2. தேர்தல் கமிஷன் ஜூன் 12ம் தேதி, 2025ம் ஆண்டு அன்று அவருக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதற்கு அவர் பதில் அளிக்காது ஏன்?

3. எந்தவொரு பிரச்னை குறித்தும் அவர் தேர்தல் கமிஷனுக்கு ஏன் எந்த கடிதமும் அனுப்பவில்லை.

4. அவர் போலி குற்றச்சாட்டுகளை கூறி வருவது மிகவும் விசித்திரமானது, மேலும் இப்போது தேர்தல் கமிஷனையும், அதில் பணியாற்றுபவர்களையும் அச்சுறுத்தத் தொடங்கி உள்ளார். இது வருந்தத்தக்கது.

5. தேர்தல் கமிஷன் இதுபோன்ற பொறுப்பற்ற அறிக்கைகளை (போலி குற்றச்சாட்டுகள்) புறக்கணித்து விட்டு, தேர்தல் கமிஷனில் பணியாற்றும் அனைவரும் பாரபட்சமின்றி வெளிப்படையாக தொடர்ந்து செயல்பட வேண்டும்.






      Dinamalar
      Follow us