sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வெறிநாய் கடித்து எருமை உயிரிழப்பு... ரைத்தா சாப்பிட்ட மக்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

/

வெறிநாய் கடித்து எருமை உயிரிழப்பு... ரைத்தா சாப்பிட்ட மக்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

வெறிநாய் கடித்து எருமை உயிரிழப்பு... ரைத்தா சாப்பிட்ட மக்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

வெறிநாய் கடித்து எருமை உயிரிழப்பு... ரைத்தா சாப்பிட்ட மக்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு


ADDED : டிச 29, 2025 11:43 AM

Google News

ADDED : டிச 29, 2025 11:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: உத்தரபிரதேசத்தில் வெறிநாய் கடித்து எருமை பலியான நிலையில், அதன் பாலால் தயாரிக்கப்பட்ட ரைத்தாவை சாப்பிட்ட கிராம மக்கள் தடுப்பூசிக்காக மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.

கடந்த டிசம்பர் 23ம் தேதி பதாவூன் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட விருந்தில், கிராம மக்களுக்கு எருமை மாட்டு பாலில் தயாரிக்கப்பட்ட ரைத்தா பரிமாறப்பட்டது. இதனை ஏராளமான மக்கள் சாப்பிட்டனர். இதனிடையே, ரைத்தாவுக்கு பயன்படுத்தப்பட்ட பாலை கறந்த எருமை மாடு, தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டு, டிசம்பர் 26ம் தேதி உயிரிழந்ததாக தகவல் பரவியது.

இதனால், பீதியடைந்த மக்கள் கிராமத்தில், தடுப்பூசி கேட்டு அங்குள் சுகாதார மையத்தில் குவிந்தனர். வெறிநாய்க்கடி தடுப்பூசி கேட்டு ஒரே சமயத்தில் ஏராளமானோர் குவிந்ததால் மருத்துவர்களும், நர்சுகளும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதையடுத்து, கிராமத்திற்கு விரைந்த சுகாதாரத் துறையினர், மக்களுக்கு ஆலோசனைகளை வழங்கி, தடுப்பூசிகளை செலுத்தினர்.

இது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது; காய்ச்சிய பால் மூலம் நோய் பரவுவது சாத்தியமில்லாத ஒன்று. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக இருப்பது சிறந்தது. இதுவரை கிராமத்தில் நோய் எதுவும் பதிவாகவில்லை, வதந்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றனர்.






      Dinamalar
      Follow us