குருவாயூர் கோவில் குளத்தில் சுத்திகரிப்பு சடங்கு: தேவஸ்தானம் அறிவிப்பு
குருவாயூர் கோவில் குளத்தில் சுத்திகரிப்பு சடங்கு: தேவஸ்தானம் அறிவிப்பு
ADDED : ஆக 25, 2025 10:01 PM

திருவனந்தபுரம்: குருவாயூரின் புகழ்பெற்ற ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலின் புனித குளத்தில் நாளை (ஆகஸ்ட் 26) சுத்திகரிப்பு சடங்கு நடத்தப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
குருவாயூரின் புகழ்பெற்ற ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலின் புனித குளத்தில், ஹிந்து அல்லாத பெண், புனித குளத்தில் கால் கழுவுவதை காட்டும் ஒரு ரீல்ஸ் எடுத்து, அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி, இது மத விதிமுறைகளை மீறும் செயல் என்று கண்டிக்கப்பட்டு பொதுமக்களின் கொந்தளிப்புக்கு வழிவகுத்தது. இதனை தொடர்ந்து அந்த பதிவை நீக்கிய அந்தப் பெண் மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் குருவாயூர் தேவஸ்தானம் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலின் புனித குளத்தில் நாளை(ஆகஸ்ட் 26) சுத்தம் செய்யப்பட்டும் சடங்குகள் நடைபெற உள்ளது. இதை ஒட்டி கோவிலின் தரிசனம் அதிகாலை 5 மணி முதல் நண்பகல் வரை கட்டுப்படுத்தப்படுகிறது.
சடங்குகள் முடிந்த பிறகு மாலையில் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப் படுவார்கள். பக்தர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு தேவஸ்தானம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.