sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

/

டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

1


UPDATED : ஆக 15, 2025 08:19 AM

ADDED : ஆக 15, 2025 07:31 AM

Google News

1

UPDATED : ஆக 15, 2025 08:19 AM ADDED : ஆக 15, 2025 07:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நாட்டின் 79வது சுதந்திர தினத்தை யொட்டி, டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

நாடு முழுவதும் இன்று (ஆக., 15) 79வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று காலை பிரதமர் மோடி டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதன் வாயிலாக, பிரதமராக மோடி 12வது முறையாக தேசியக்கொடி ஏற்றிய பெருமையை பெற்றார். முன்னதாக, அவர் முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துக்கள். இந்த மங்களகரமான தருணம் அனைத்து நாட்டு மக்களின் வாழ்க்கையிலும் புதிய உற்சாகத்தையும் புதிய வீரியத்தையும் கொண்டு வரட்டும்.

இதனால் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவது புதிய உத்வேகத்தைப் பெறட்டும். ஜெய் ஹிந்த். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மரியாதை

முன்னதாக, டில்லி ராஜ்கோட்டில் காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.








      Dinamalar
      Follow us