sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க இந்திய கடற்படை, விமானப்படை மும்முரம்

/

பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க இந்திய கடற்படை, விமானப்படை மும்முரம்

பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க இந்திய கடற்படை, விமானப்படை மும்முரம்

பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க இந்திய கடற்படை, விமானப்படை மும்முரம்

1


ADDED : ஆக 05, 2025 04:31 PM

Google News

1

ADDED : ஆக 05, 2025 04:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த பிரம்மோஸ் ஏவுகணைகளை அதிகளவில் வாங்க இந்திய விமானப்படையும், கடற்படையும் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்தியா ரஷ்யா கூட்டு தயாரிப்பில் பிரம்மோஸ் ஏவுகணை தயாரிக்கப்பட்டு உள்ளது. நான்கு நாட்கள் நடந்த 'ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது, கடைசி நாளில் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மீது பிரம்மோஸ் ஏவுகணை மூலம் இந்தியா துல்லியமாக தாக்குதல் நடத்தியது. இதில் பலத்த சேதம் ஏற்படவே, தாக்குதலை நிறுத்தும்படி பாகிஸ்தான் கெஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணைகளின் திறன் குறித்து பிரதமர் மோடியும் பாராட்டு தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து இந்த ஏவுகணைக்கான மவுசு அதிகரித்துள்ளது. மற்ற நாடுகளின் ஏவுகணைகளை காட்டிலும் பிரம்மோஸ் ஏவுகணையின் விலை குறைவு என்பதால், இதனை வாங்க பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், இந்த ஏவுகணைகளை அதிகளவில் வாங்க இந்திய விமானப்படையும், கடற்படையும் மும்முரம் காட்டி வருகின்றன. விரைவில், மத்திய பாதுகாப்பு அமைச்சரவையின் உயர்மட்டக்குழு விரைவில் கூடி, இதற்கு ஒப்புதல் வழங்க திட்டமிட்டுள்ளது.

கடற்படையில் பயன்படுத்தப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகளையும் மற்றும் விமானப்படைக்கு வான் மற்றும் தரையில் இருந்து தாக்க பயன்படுத்தப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. பிரம்மோஸ் ஏவுகணைகளை, போர்க்கப்பல்களில் வைத்து பயன்படுத்த இந்திய கடற்படையும், ரஷ்யா தயாரிப்பான சு-30 எம்கேஐ போர் விமானங்களில் வைத்து பயன்படுத்த இந்திய விமானப்படையும் திட்டமிட்டு உள்ளன.






      Dinamalar
      Follow us