sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தீவிரவாதம் படிக்க ரூ.156 மட்டுமே: பெண்களுக்கு ஜெய்ஷ் - இ - முகமது பயிற்சி

/

தீவிரவாதம் படிக்க ரூ.156 மட்டுமே: பெண்களுக்கு ஜெய்ஷ் - இ - முகமது பயிற்சி

தீவிரவாதம் படிக்க ரூ.156 மட்டுமே: பெண்களுக்கு ஜெய்ஷ் - இ - முகமது பயிற்சி

தீவிரவாதம் படிக்க ரூ.156 மட்டுமே: பெண்களுக்கு ஜெய்ஷ் - இ - முகமது பயிற்சி

15


ADDED : அக் 23, 2025 02:00 AM

Google News

15

ADDED : அக் 23, 2025 02:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பாகிஸ்தானில் இயங்கி வரும் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு, பெண்களையும் பயங்கரவாத அமைப்பில் இணைக்கும் முயற்சியை எடுத்துள்ளது. இதற்காக, 'ஆன்லைன்' வாயிலாக பயங்கரவாத பாடம் படிப்பதற்கு கட்டணமாக, 156 ரூபாயை நிர்ணயித்துள்ளது.

ஐ.நா.,வால் சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் - இ - முகமது பாகிஸ்தானில் வேரூன்றி இருக்கிறது.

இந்த அமைப்பு சமீபத்தில் பெண்களையும் இணைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்தது.

இதற்காக, 'ஆன்லைன்' மூலம் பயங்கரவாத பாடம் படிக்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நவ., 8 முதல் துவங்கும் இந்த ஆன்லைன் பாட வகுப்பிற்கு கட்டணமாக இந்திய மதிப்பில், 156 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத தலைவர் மசூத் அசாரின் சகோதரிகள் சாடியா அசார் மற்றும் சமைரா அசார் ஆன்லைன் வகுப்புகளை தினசரி எடுக்க உள்ளனர்.

பெண்களுக்காக ஆரம் பிக்கப்பட்ட ஜமாத் உல் - முமினாத் பயங்கர வாத அமைப்பில் மூளை சலவை செய்து பெண்களை சேர்க்க இந்த வகுப்புகள் நடத்தப் படுகின்றன. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூரில், கடந்த மாதம் பொதுக்கூட்டம் நடந்தது.

அதில் பங்கேற்ற ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத தலைவர் மசூத் அசார், நிதி திரட்டும் பணிகளை மேற்கொள்ளும்படி அறி வுறுத்தியிருந்தார். அதனை தொடர்ந்தே ஆன்லைன் மூலம் பயங்கரவாத பாடம் எடுக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us