பிடிவாதம் வேண்டாம்!
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு, முழு மாநில அந்தஸ்து வழங்குவதாக, பா.ஜ., வாக்குறுதி அளித்தது. எனினும் இதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த விவகாரத்தில், மோடி அரசு தன் பிடிவாதத்தை விட்டு விட்டு, அங்குள்ள மக்களின் குரலை கேட்க வேண்டும்.
பிரியங்கா
பொதுச்செயலர்,
காங்.,
மனிதாபிமானம் இல்லை!
கொடுத்த வாக்குறுதியை, பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி உள்ளார். ஓட்டு வங்கி அரசியல் காரணமாக, குடியுரிமை திருத்த சட்டத்தை காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. இந்த கட்சிகளிடம், துளியும் மனிதாபிமானம் இல்லை.
நித்யானந்த் ராய்
மத்திய இணை அமைச்சர்,
பா.ஜ.,
பதிலடி கொடுக்க வேண்டும்!
நாட்டின் முக்கிய பிரச்னைகளில் இருந்து திசை திருப்ப, குடியுரிமை திருத்த சட்டத்தை, மத்திய பா.ஜ., அரசு அமல்படுத்தி உள்ளது. இது போன்ற சட்டங்களுக்கு, லோக்சபா தேர்தலில், ஓட்டுகள் வாயிலாக மக்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
மெஹபூபா முப்தி
தலைவர்,
மக்கள் ஜனநாயக கட்சி

