sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மண்டல காலத்தில் சபரிமலையில் அதிகபட்ச மழை பதிவு

/

மண்டல காலத்தில் சபரிமலையில் அதிகபட்ச மழை பதிவு

மண்டல காலத்தில் சபரிமலையில் அதிகபட்ச மழை பதிவு

மண்டல காலத்தில் சபரிமலையில் அதிகபட்ச மழை பதிவு


ADDED : டிச 14, 2024 02:52 AM

Google News

ADDED : டிச 14, 2024 02:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை:சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல காலம் தொடங்கிய பின்னர் கடந்த இரண்டு நாட்களில் அதிகபட்ச மழை பதிவானது. எனினும் புல் மேடு - எருமேலி பாதைகளில் எவ்வித கட்டுப்பாடும் ஏற்படுத்தப்படவில்லை.

டிச. 12 காலை 8:30 முதல் தொடங்கிய 24 மணி நேரத்தில் சபரிமலை சன்னிதானத்தில் 68.00 மி.மீ. மழை பதிவானது. இது இந்த சீசனில் அதிகபட்ச மழையாகும். நிலக்கல்லில் 73.00 மி.மீ மழை பதிவானது.

நேற்று காலை 8:30 முதல் மதியம் 2:30 மணி வரை சன்னிதானத்தில் 14.6 மி.மீ. மழை பெய்தது. நிலக்கல்லில் 1.6 மி.மீ. , பம்பையில் 12.6 மி. மீ. மழையும் பதிவானது.

மழையால் பம்பையில் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படாததால் பக்தர்களுக்கு கட்டுப்பாடு ஏற்படுத்தப்படவில்லை. தீயணைப்புத் துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் நதிக்கரையில் தயார் நிலையில் இருந்தனர். எருமேலி பெருவழிப் பாதையிலும், சத்திரம் - புல் மேடு பாதையிலும் எவ்வித கட்டுப்பாடும் ஏற்படுத்தவில்லை. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் மலையேறி வரும் பக்தர்கள் சிரமப்பட்டனர்.






      Dinamalar
      Follow us