sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மஹாராஷ்டிரா தேர்தல்; இரண்டு கூட்டணியிலும் குழப்பம்

/

மஹாராஷ்டிரா தேர்தல்; இரண்டு கூட்டணியிலும் குழப்பம்

மஹாராஷ்டிரா தேர்தல்; இரண்டு கூட்டணியிலும் குழப்பம்

மஹாராஷ்டிரா தேர்தல்; இரண்டு கூட்டணியிலும் குழப்பம்


UPDATED : நவ 23, 2025 06:22 AM

ADDED : நவ 23, 2025 02:48 AM

Google News

UPDATED : நவ 23, 2025 06:22 AM ADDED : நவ 23, 2025 02:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மஹாராஷ்டிராவில் பா.ஜ., - ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையில் தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, காங்., உடன் எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ளன.

மஹாராஷ்டிராவின் 246 முனிசிபல்கள் மற்றும் 42 பஞ்சாயத்து தேர்தல்கள் அடுத்த மாதம் 2ம் தேதி நடக்கிறது. 'இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இல்லாமல், தனித்தனியாக போட்டியிடுகின்றன. காங்., ஒரு பக்கம், உத்தவ் தாக்கரே இன்னொரு பக்கம் என போட்டியிடுவதால், பா.ஜ., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்' என சொல்லப்படுகிறது.

காங்கிரசோ, 'உத்தவ் தாக்கரேவுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க முடியாது' என, கறாராக சொல்லிவிட்டது; 'எங்களுக்கு உதவுங்கள்' என, சரத் பவாரிடம் கை ஏந்தி நிற்கிறது. ஆனால், இதுவரை அவர் எந்த முடிவும் எடுக்கவில்லையாம்.

உத்தவ் தாக்கரேவும், அதே தாக்கரே குடும்பத்தைச் சேர்ந்த ராஜ் தாக்கரேவின் கட்சியான நவ்நிர்மான் சேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்கின்றனர். அப்படியானால் மாராத்தி சமூகத்தினர் இவர்களுக்கு ஓட்டளிப்பர்; இதனால், ஓட்டு சிதறல் ஏற்படும். ஆனால், இதுகுறித்து எதிர்க்கட்சி கூட்டணி கவலைப்படவில்லை.

அதே சமயம், பா.ஜ., கூட்டணியிலும் சில குழப்பங்கள். ஏக்நாத் ஷிண்டே கட்சியினர், பா.ஜ.,விற்கு எதிராக சில வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர். சில இடங்களில் பா.ஜ.,வினரே சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். இந்நிலையில், 'எதிர்க்கட்சி கூட்டணி ஒற்றுமையாக போட்டியிட்டால், பா.ஜ.,வை வெல்ல முடியும்; ஆனால் ஒற்றுமை இல்லையே... என்ன செய்வது?' என, பா.ஜ.,விற்கு எதிரானவர்கள் வருத்தப்படுகின்றனர்.






      Dinamalar
      Follow us