sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆங்கிலத்தில் பெயர் எழுத தெரியாத மதரசா மாணவர்கள்

/

ஆங்கிலத்தில் பெயர் எழுத தெரியாத மதரசா மாணவர்கள்

ஆங்கிலத்தில் பெயர் எழுத தெரியாத மதரசா மாணவர்கள்

ஆங்கிலத்தில் பெயர் எழுத தெரியாத மதரசா மாணவர்கள்

10


ADDED : ஏப் 29, 2025 01:58 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 01:58 AM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: உத்தர பிரதேசத்தின் மதரசா பள்ளிகளில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தங்கள் பெயரை ஆங்கிலத்தில் எழுதத் தெரியவில்லை என்பதை, ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் கண்டறிந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பல்வேறு மாவட்டங்களிலும் அங்கீகாரம் பெற்ற மதரசா பள்ளிகள் நடக்கின்றன. இஸ்லாம் தொடர்பான கல்வி நிறுவனமாக இருந்தாலும், மற்ற பள்ளிகளைப் போலவே இங்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. இங்குள்ள பஹ்ரைச் மாவட்டத்தில் மட்டும், அங்கீகாரம் பெற்ற 301 மதரசாக்கள் உள்ளன. இது தவிர, அங்கீகாரமற்ற 495 மதரசா பள்ளிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரி சஞ்சய் மிஸ்ரா தலைமையிலான அதிகாரிகள், மதரசா பள்ளிகளில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, படி டாக்கியா என்ற இடத்தில் செயல்படும் 'ஜாமியா காஜியா செய்யதுல் உலுாம்' என்ற மதரசா பள்ளியில், 10ம் வகுப்பு மாணவர்கள் ஒருவருக்குகூட அவர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதத் தெரியவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சஞ்சய் மிஸ்ரா கூறுகையில், “மாணவர்களுக்கு தங்கள் பெயரையும், மதரசாவின் பெயரையும் ஆங்கிலத்தில் எழுதத் தெரியவில்லை. வருகைப் பதிவேட்டில் குறிப்பிட்டிருந்த எண்ணிக்கையைவிட, மிகக் குறைவான மாணவர்களே வகுப்புகளில் இருந்தனர். ஆசிரியர்கள் சிலரும், வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு வெளியில் சென்று விட்டனர். எனவே, கல்வித்தரத்தை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதரசா நிர்வாகத்துக்கும், ஆசிரியர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது,” என்றார்.






      Dinamalar
      Follow us