sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பா.ஜ.,வில் அநியாயம் நடந்தது: லட்சுமண் சவதி

/

பா.ஜ.,வில் அநியாயம் நடந்தது: லட்சுமண் சவதி

பா.ஜ.,வில் அநியாயம் நடந்தது: லட்சுமண் சவதி

பா.ஜ.,வில் அநியாயம் நடந்தது: லட்சுமண் சவதி


ADDED : பிப் 26, 2024 07:34 AM

Google News

ADDED : பிப் 26, 2024 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஜயபுரா: ''பா.ஜ.,வினர் எனக்கு அநியாயம் செய்தனர்,'' என காங்., - எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக, விஜயபுராவில் அவர் கூறியதாவது:

பா.ஜ.,வால் எனக்கு அநியாயம் நடந்தது. எங்களின் காணிக சமுதாயம் என்னுடன் நின்றது. வரும் நாட்களில் அனைத்தையும் பகிரங்கப்படுத்துவேன். இந்த சமுதாயத்தினருக்கு களங்கம் ஏற்பட கூடாது என, நான் பணியாற்றுகிறேன்.

என் கண்ணில் கண்ணீர் வந்த போது, மொத்த சமுதாயமும் எனக்கு ஆதரவாக நின்றது; கண்ணீரை துடைத்தது.

என் மனதில் அடக்கி வைத்துள்ள பல விஷயங்களை, நான் வெளிப்படுத்துவேன். மீண்டும் விஜயபுராவுக்கு வருவேன். எங்கள் சமுதாயம் எப்போதும், யார் முதுகிலும் குத்தியதில்லை. காணிக சமுதாயம் அனைவருடனும் நல்லுறவு வைத்துள்ளது.

வேறு சமுதாயத்துக்கு அவமதிப்பு ஏற்படாமல், எங்கள் சமுதாயத்தை பலப்படுத்த வேண்டும். இதன்படி எங்களின் திட்டங்கள் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us