sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அந்தமானில் தரையிறங்க முடியாமல் சென்னை திரும்பிய விமானம்; பயணிகள் 174 பேர் அவதி

/

அந்தமானில் தரையிறங்க முடியாமல் சென்னை திரும்பிய விமானம்; பயணிகள் 174 பேர் அவதி

அந்தமானில் தரையிறங்க முடியாமல் சென்னை திரும்பிய விமானம்; பயணிகள் 174 பேர் அவதி

அந்தமானில் தரையிறங்க முடியாமல் சென்னை திரும்பிய விமானம்; பயணிகள் 174 பேர் அவதி

1


ADDED : செப் 01, 2025 08:05 PM

Google News

1

ADDED : செப் 01, 2025 08:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையிலிருந்து, அந்தமான் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், அங்கு நிலவிய மோசமான வானிலையால், தரையிறங்க முடியாமல் சென்னை திரும்பி வந்தது.

சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 174 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்களுடன் புறப்பட்டது. அந்தமான் சென்றதும் விமானம் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டம் அடித்தது. பயணிகள் அச்சம் அடைந்தனர். அந்தமான் விமான நிலையத்தில் தரைக்காற்று அதிகம் வீசியது. வானிலையும் மோசமாக இருந்தது. அதனால் விமானம் தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டது.

இது பற்றி விமானிகள் அறிவித்ததையடுத்து, பயணிகள் ஓரளவு அமைதியானார்கள். சிறிது நேரம் கழித்து விமானம் தரையிறங்க முயன்றும் முடியவில்லை. இதனால் விமானிகள் சென்னை விமான நிலையம் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். விமானத்தை சென்னைக்கு திருப்ப உத்தரவு வந்தது.

மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து அந்தமான் சென்ற விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தது. பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்தில் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us