சல்மான் கான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு சம்பவம்: இரு துப்பாக்கிகள் சிக்கின
சல்மான் கான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு சம்பவம்: இரு துப்பாக்கிகள் சிக்கின
ADDED : ஏப் 23, 2024 08:58 PM

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை குஜராத் நதியில் மும்பை போலீசார் கண்டறிந்து மீட்டனர்.
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் வீடு மும்பை பந்த்ராவில் உள்ளது. இவரது வீட்டின் அருகே ஏப். 14-ல் அதிகாலை 5 மணியளவில் பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடினர். இதில் யாருக்கும் காயமில்லை.
இந்தசம்பவ குறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி விக்கி குப்தா,24, சாகர்பால் 21 ஆகிய இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
இந்த வழக்கில் இன்று மும்பை போலீசார் குஜராத்தில் உள்ள தைபி ஆற்றில் தோட்டாக்களுடன் துப்பாக்கிகள் ,பத்திரிகைகளை கண்டறிந்து மீட்டனர். கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் சல்மான கான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு நடத்த பயன்படுத்தப்பட்டதா என விசாரிக்கின்றனர்.

