sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எனக்கு நடந்ததை அரசியலாக்க வேண்டாம்: பா.ஜ.,வுக்கு ஸ்வாதி மாலிவால் வேண்டுகோள்

/

எனக்கு நடந்ததை அரசியலாக்க வேண்டாம்: பா.ஜ.,வுக்கு ஸ்வாதி மாலிவால் வேண்டுகோள்

எனக்கு நடந்ததை அரசியலாக்க வேண்டாம்: பா.ஜ.,வுக்கு ஸ்வாதி மாலிவால் வேண்டுகோள்

எனக்கு நடந்ததை அரசியலாக்க வேண்டாம்: பா.ஜ.,வுக்கு ஸ்வாதி மாலிவால் வேண்டுகோள்

7


UPDATED : மே 17, 2024 05:13 PM

ADDED : மே 17, 2024 10:41 AM

Google News

UPDATED : மே 17, 2024 05:13 PM ADDED : மே 17, 2024 10:41 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ‛‛ நான் தாக்கப்பட்ட விவகாரத்தை பா.ஜ., அரசியலாக்க வேண்டாம்'', என ஆம் ஆத்மி கட்சி ராஜ்யசபா எம்.பி., ஸ்வாதி மாலிவால் கூறியுள்ளார்.

வழக்குப்பதிவு


ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., ஸ்வாதி மாலிவால். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க சென்ற போது தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



முக்கியமான தேர்தல்


இது தொடர்பாக ஸ்வாதி மாலிவால் கூறியதாவது: எனக்கு நடந்தது மோசமானது. எனது வாக்குமூலத்தை போலீசில் அளித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. எனக்காக வேண்டிக் கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது நாட்டில் முக்கியமான தேர்தல் நடக்கிறது. ஸ்வாதி மாலிவால் முக்கியமல்ல. இந்த விவகாரம் நாட்டிற்கு முக்கியமானது அல்ல. இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என பா.ஜ.,வுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

எப்ஐஆர்.,ல் இருப்பது என்ன

இதனிடையே, பிபவ் குமார் மீது சுவாதி மாலிவால் அளித்த புகாரில் கூறப்பட்டு உள்ளதாவது: எனது வயிறு, மார்பு பகுதியில் பிபவ் குமார் எட்டி உதைத்தார். என்னை கொன்றுவிடுவேன் எனவும் அவர் மிரட்டினார். வலி அதிகம் இருந்ததால், விட்டு விடுங்கள் என அவரிடம் கேட்டும் என்னை அவர் தாக்கினார். குறைந்தது 7 - 8 முறை கன்னத்தில் அறைந்தார். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.








      Dinamalar
      Follow us