sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கொரோனா தடுப்பூசி: பக்கவிளைவுகளுக்கான இழப்பீடு கொள்கை உருவாக்க அரசுக்கு உத்தரவு

/

கொரோனா தடுப்பூசி: பக்கவிளைவுகளுக்கான இழப்பீடு கொள்கை உருவாக்க அரசுக்கு உத்தரவு

கொரோனா தடுப்பூசி: பக்கவிளைவுகளுக்கான இழப்பீடு கொள்கை உருவாக்க அரசுக்கு உத்தரவு

கொரோனா தடுப்பூசி: பக்கவிளைவுகளுக்கான இழப்பீடு கொள்கை உருவாக்க அரசுக்கு உத்தரவு

2


ADDED : மார் 11, 2026 05:35 AM

Google News

2

ADDED : மார் 11, 2026 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- டில்லி சிறப்பு நிருபர் -

கொரோனா தடுப்பூசி செலுத்திய பின் ஏற்படும் தீவிர பக்கவிளைவுகளால் பாதிக்கப்படுவோருக்கு, இழப்பீடு வழங்குவதற்கான கொள்கையை உருவாக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'இத்தகைய மரணங்கள் குறித்து சுதந்திரமான குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். முறையான பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது .

இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கொரோனா தடுப்பூசி செலுத்திய பின் ஏற்படும் தீவிரமான பாதிப்புகளுக்கு, இழப்பீட்டு கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும். அதாவது, அரசின் மீது தவறு இருப்பதாகக் கருதாமல், மனிதாபிமான அடிப்படையில் இந்த நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

இத்தகைய இழப்பீட்டு திட்டத்தை உருவாக்குவது, தடுப்பூசி வினியோகத்தில் அரசு தரப்பிலோ அல்லது அதிகாரிகளின் தரப்பிலோ ஏதேனும் தவறு அல்லது குறைபாடு இருப்பதாக ஒப்புக் கொண்டதாகக் கருதப்படாது.

தடுப்பூசிக்கு பிந்தைய பாதிப்புகளை கண்காணிக்கும் தற்போதைய நடைமுறை தொடர வேண்டும். இந்த விவகாரத்தை ஆராய தனியாக ஒரு நிபுணர் குழுவை அமைக்க வேண்டிய அவசியமில்லை. தற்போதுள்ள அறிவியல் ரீதியான கண்காணிப்பு அமைப்புகளே போது மானது. இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.

பிழையற்ற இழப்பீட்டு கொள்கை?


இது ஒரு இழப்பீட்டு முறை. பாதிக்கப்பட்ட நபர், மருத்துவ செலவு அல்லது உயிரிழப்பு போன்ற இழப்புகளுக்கு இழப்பீடு பெற, அந்த தவறுக்கு யார் காரணம் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. இது நீண்ட கால சட்டப் போராட்டங்களை தவிர்த்து, பாதிக்கப்பட்டோருக்கு விரைவாக நிதி உதவி கிடைப்பதை உறுதி செய்கிறது. வாகன விபத்து காப்பீடு மற்றும் தடுப்பூசி பாதிப்பு திட்டங்களில் இத்தகைய முறை உலகளவில் பின்பற்றப்படுகிறது.








      Dinamalar
      Follow us