sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'காங்கிரசுக்கு ஒருபோதும் அழிவே கிடையாது': கார்கே

/

'காங்கிரசுக்கு ஒருபோதும் அழிவே கிடையாது': கார்கே

'காங்கிரசுக்கு ஒருபோதும் அழிவே கிடையாது': கார்கே

'காங்கிரசுக்கு ஒருபோதும் அழிவே கிடையாது': கார்கே


ADDED : டிச 29, 2025 12:37 AM

Google News

ADDED : டிச 29, 2025 12:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ''காங்கிரஸ் என்றால் கொள்கை; கொள்கைகள் ஒருபோதும் அழிவதில்லை,'' என அக்கட்சியின் 140வது நிறுவன தினத்தில் அதன் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.

டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று அக்கட்சியின் 140வது நிறுவன தின விழா நடந்தது. இதில் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா, காங்கிரஸ் எம்.பி.,யும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் கார்கே பேசியதாவது: காங்கிரஸ் முடிந்துவிட்டது என்பவர்களிடம் ஒன்றை சொல்கிறேன். எங்களிடம் அதிகாரம் இல்லாமல் இருக்கலாம். கொள்கை எனும் முதுகெலும்பு இன்னும் நேராக தான் உள்ளது. இதனால் காங்.,குக்கு அழிவே இல்லை. அரசியல் சாசனம், மதச்சார்பின்மை, ஏழை களின் உரிமைகள் ஆகியவற்றில் நாங்கள் சமரசம் செய்ததில்லை.

காங்கிரஸ் மக்களை ஒன்றிணைக்கிறது; பா.ஜ., மக்களைப் பிரிக்கிறது. காங்கிரஸ் மதத்தை நம்பிக்கையாக மட்டும் பார்க்கிறது. ஆனால் சிலர் மதத்தை அரசியலாக மாற்றிவிட்டனர். இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக மாறியது காங்கிரசின் பெரும் தலைவர்களால் தான். இவ்வாறு பேசினார்.






      Dinamalar
      Follow us