ADDED : ஜன 01, 2025 12:50 AM

அ நிறம் | அளவு
கார்வாரில் ஓடும் காளி ஆற்றின் குறுக்கே 60 ஆண்டுகள் பழமையான பாலம் உள்ளது.
இந்த பாலம் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி இரவு இடிந்து விழுந்தது. அந்த வழியாக சென்ற லாரி, ஆற்றில் பாய்ந்தது. டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆற்றில் விழுந்த லாரியை மீட்டு தர, உத்தர கன்னடா மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, லாரி உரிமையாளர் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
