sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மோடியை சந்தித்தார் பீஹார் முதல்வர் நிதீஷ்

/

மோடியை சந்தித்தார் பீஹார் முதல்வர் நிதீஷ்

மோடியை சந்தித்தார் பீஹார் முதல்வர் நிதீஷ்

மோடியை சந்தித்தார் பீஹார் முதல்வர் நிதீஷ்


ADDED : பிப் 07, 2024 07:38 PM

Google News

ADDED : பிப் 07, 2024 07:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பீஹார் முதல்வராக பதவியேற்ற நிதீஷ்குமார் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்தது. கூட்டணி அரசில் இருந்து திடீரென விலகி, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தார் நிதீஷ் குமார்.

கவர்னர் மாளிகையில் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து தனது ராஜினாமா செய்தார். பின் பா.ஜ.வுடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல்வராக கடந்த ஜன.28-ல் பதவியேற்றார். அத்துடன் லோக்சபா தேர்தலுக்காக அமைந்துள்ள ‛‛இண்டியா'' கூட்டணியிலிருந்தும் வெளியேறினார்.

இந்நிலையில் இன்று டில்லி சென்றிருந்த நிதீஷ்குமார், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தே.ஜ. கூட்டணியில் மீண்டும் ஐக்கியமான பின் மோடியை நிதீஷ் குமார் முதல் முறையாக சந்தித்து பேசினார் என கூறப்படுகிறது. தொடர்ந்து அமித்ஷா, நட்டா ஆகியோரையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. வரும் 12-ம் தேதி பீஹார் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதையடுத்து மோடியுடனான நிதீஷ் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.






      Dinamalar
      Follow us