sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உஸ்மான் ஹாதியின் கொலையாளிகள் குறித்து வங்கதேசம் சொல்வது பொய்; மேகலாயா போலீசார், பிஎஸ்எப் நிராகரிப்பு

/

உஸ்மான் ஹாதியின் கொலையாளிகள் குறித்து வங்கதேசம் சொல்வது பொய்; மேகலாயா போலீசார், பிஎஸ்எப் நிராகரிப்பு

உஸ்மான் ஹாதியின் கொலையாளிகள் குறித்து வங்கதேசம் சொல்வது பொய்; மேகலாயா போலீசார், பிஎஸ்எப் நிராகரிப்பு

உஸ்மான் ஹாதியின் கொலையாளிகள் குறித்து வங்கதேசம் சொல்வது பொய்; மேகலாயா போலீசார், பிஎஸ்எப் நிராகரிப்பு

2


ADDED : டிச 28, 2025 09:47 PM

Google News

2

ADDED : டிச 28, 2025 09:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கவஹாத்தி: மாணவர் தலைவர் ஷெரீப் ஹாதியைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் வடகிழக்கு மாநிலத்திற்கு தப்பிச் சென்றதாக வங்கதேசத்தில் ஊடகங்களில் வெளியான செய்திகளை மேகாலயா போலீசார், எல்லை பாதுகாப்பு படையினர் (பிஎஸ்எப்)நிராகரித்துள்ளனர்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில், அடுத்தாண்டு பிப்., 12ல் பார்லிமென்ட் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்தே அந்நாட்டில் தொடர்ந்து வன்முறைகள் அரங்கேறி வருகின்றன.'இன்குலாப் மஞ்ச்' என்ற மாணவர் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, கடந்த வாரம் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிர்இழந்தார். இதையடுத்து, அந்நாட்டில் பெரும் வன்முறை வெடித்தது.

ஓஸ்மான் ஹாதியை துப்பாக்கியால் சுட்டதாக சந்தேகிக்கும் இருவர் இந்தியாவுக்குள் நுழைந்தனர் என டாக்கா போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் வங்கதேச குற்றச்சாட்டை இந்திய எல்லை பாதுகாப்புப்படை மற்றும் மேகாலயா போலீசார் மறுத்துள்ளனர்.'மேகாலயாவில் உள்ள ஹலுயாகாத் செக்டார் சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் தனிநபர் நுழைந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.

வங்கதேசத்தின் குற்றசாட்டு ஆதாரமற்றது. தவறாக வழிநடத்துவதாகும். எல்லைப் பாதுகாப்பு படையினர் அப்படி நுழைவது கண்டுபிடிக்கவும் இல்லை என மேகலயாவில் உள்ள பிஎஸ்எப் தலைவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us