sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

''என்னைப் போல ராகுலையும் ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர் ஏமாற்ற மாட்டார்'': ரேபரேலியில் சோனியா கெஞ்சல்

/

''என்னைப் போல ராகுலையும் ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர் ஏமாற்ற மாட்டார்'': ரேபரேலியில் சோனியா கெஞ்சல்

''என்னைப் போல ராகுலையும் ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர் ஏமாற்ற மாட்டார்'': ரேபரேலியில் சோனியா கெஞ்சல்

''என்னைப் போல ராகுலையும் ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர் ஏமாற்ற மாட்டார்'': ரேபரேலியில் சோனியா கெஞ்சல்

37


UPDATED : மே 17, 2024 05:34 PM

ADDED : மே 17, 2024 05:32 PM

Google News

UPDATED : மே 17, 2024 05:34 PM ADDED : மே 17, 2024 05:32 PM

37


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரேபரேலி: ''என் மகன் ராகுலை ரேபரேலி மக்களிடம் ஒப்படைக்கிறேன். என்னை ஏற்றுக்கொண்டது போல் நீங்கள் அவரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; ராகுல் உங்களை ஏமாற்ற மாட்டார்'' என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.,யுமான சோனியா பேசினார்.

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் இண்டியா கூட்டணி கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, ராகுல், அக்கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Image 1270230கூட்டத்தில் பிரியங்கா பேசுகையில், ''கடந்த 10 ஆண்டுகளாக, நாட்டின் சாமானியர்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகள் துன்புறுத்தப்படுகிறார்கள். இந்த நாடு தனது குரலைக் கேட்க விரும்புகிறது. ஆனால் நரேந்திர மோடியின் அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. இந்த பா.ஜ., அரசை அகற்ற வேண்டும் என்ற புயல் வீசுகிறது,'' என்றார்.

உண்மையான உறவு


அகிலேஷ் யாதவ் பேசியதாவது: ராகுல் ரேபரேலியில் வரலாற்றில் பொறிக்கப்படும் அளவிற்கான வெற்றிப்பெறுவார் என இந்த மாபெரும் கூட்டம் தீர்மானித்துள்ளது. அதேபோல், ரேபரேலியில் பா.ஜ.,வை அகற்ற வேண்டும் எனவும் மக்கள் முடிவு செய்துள்ளனர்.

நாட்டின் தலைவர் (மோடி) செல்லும் இடமெல்லாம் போலியான உறவை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார். ராகுலுக்கும் ரேபரேலிக்கும் உண்மையான உறவு இருப்பதையும் அவர் உணர வேண்டும். ரேபரேலி பெயரும், ராகுலின் பெயரும் ஆங்கிலத்தில் 'ஆர்' என்ற எழுத்தில் துவங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.Image 1270229

கங்கை போல தூய்மையானது


சோனியா பேசியதாவது: எங்கள் குடும்பத்தின் வேர்கள் இந்த மண்ணின் மண்ணோடு இணைக்கப்பட்டுள்ளன. இந்த உறவு, கங்கை நதியைப் போல தூய்மையானது; இந்த உறவு அவாத் மற்றும் ரேபரேலி விவசாயிகளின் போராட்டத்துடன் துவங்கியது. இந்திராவின் இதயத்தில் ரேபரேலிக்கு தனி இடம் இருந்தது. அவர் மிகவும் நெருக்கமாக வேலை செய்வதை நான் பார்த்திருக்கிறேன்.

ஏமாற்ற மாட்டார்


அனைவரையும் மதிக்க வேண்டும், பலவீனமானவர்களைக் காக்க வேண்டும், நீதிக்கு எதிராகப் போராட வேண்டும், புனிதமாக இருக்க வேண்டும் என இந்திராவும் ரேபரேலி மக்களும் எனக்குக் கொடுத்த அதே பாடங்களை ராகுலுக்கும் பிரியங்காவுக்கும் கொடுத்திருக்கிறேன். உங்கள் அன்பு என்னை ஒருபோதும் தனிமைப்படுத்தவில்லை. என்னிடம் உள்ள அனைத்தும் உங்களுடையது. என் மகனை உன்னிடம் ஒப்படைக்கிறேன். என்னை ஏற்றுக்கொண்டது போல் நீங்களும் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும். ராகுல் உங்களை ஏமாற்ற மாட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

ராகுல்


ராகுல் பேசியதாவது: இங்கு வந்துள்ள ஊடகவியலாளர்களை வரவேற்கிறேன். அவர்கள் நமது நண்பர்கள் அல்ல, மோடி மற்றும் அதானியின் நண்பர்கள். யாரிடமாவது நீங்கள் சென்று கேட்டால் நாட்டில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை இருப்பதாக கூறுவார்கள். அதுவே ஊடகங்களிடம் நாட்டுப்பிரச்னை பற்றிக்கேட்டால், அம்பானி கல்யாணம் நடக்கிறது பாருங்கள், நரேந்திர மோடி என்ன சொல்கிறார் என பாருங்கள் என்பார்கள்.

Image 1270231நான் என்ன வேண்டுமென்றாலும் பிரதமரை சொல்ல வைக்க முடியும். 'மோடி அவர்களே, நீங்கள் அதானி-அம்பானியின் பெயர்களை ஒருபோதும் பேசாதீர்கள்' என்று நான் சொன்னேன், அடுத்த இரண்டு நாட்களில், 'அதானி-அம்பானி' என்று நரேந்திர மோடி கூறுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us