sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.12,000 கோடி போதை பொருள் பறிமுதல் தெலுங்கானாவில் 13 பேர் கைது

/

ரூ.12,000 கோடி போதை பொருள் பறிமுதல் தெலுங்கானாவில் 13 பேர் கைது

ரூ.12,000 கோடி போதை பொருள் பறிமுதல் தெலுங்கானாவில் 13 பேர் கைது

ரூ.12,000 கோடி போதை பொருள் பறிமுதல் தெலுங்கானாவில் 13 பேர் கைது


ADDED : செப் 07, 2025 08:38 AM

Google News

ADDED : செப் 07, 2025 08:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைதராபாத் : மஹாராஷ்டிரா போலீசார், தெலுங்கானாவில் நடத்திய அதிரடி சோதனையில், தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான, 'மெபத்ரோன்' போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக, மென்பொறியாளர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

மஹாராஷ்டிராவின் தானே பகுதியைச் சேர்ந்த மிரா ரோடு போலீசார், சில நாட்களுக்கு முன், 200 கிராம் போதை பொருளை ஒருவரிடம் இருந்து கைப்பற்றினர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், தெலுங்கா னாவில் இருந்து போதை பொருள் கிடைத்ததாக தெரிவித்தார். இதையடுத்து, கடந்த சில நாட்களாக மிரா ரோடு போலீசார், போதை பொருள் தடுப்பு அதிகாரிகளுடன் இணைந்து 60க்கும் மேற்பட்ட இடங்களில் அதி ரடி சோதனை நடத்தினர்.

விசாரணையில், தெலுங்கானாவில் மிகப்பெரிய குழு அமைத்து போதை பொருள் கடத்தியது தெரியவந்தது.

மேலும் இந்த, 'நெட்வொர்க்' வெளிநாடுகள் வரை பரவியிருப்பதால், தொடக்கப்புள்ளியை அறிய முடியாமல் போலீசார் திணறினர்.

இந்நிலையில், தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள சேரலபள்ளி பகுதியில் செயல்படும் தொழிற்சாலையில், மிரா ரோடு போலீசார் போதை பொருள் தடுப்பு அதிகாரிகளுடன் சென்று நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

அங்கு, மெபத்ரோன் போதை பொருள் தயாரிக்க பயன்படும், 32,000 லிட்டர் மூலப் பொருளை அவர்கள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு, 12,000 கோடி ரூபாய்.

போதை பொருள் தயாரிப்பில் மூளையாக செயல்பட்ட மென்பொறியாளர் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us