ADDED : ஜூலை 28, 2024 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்டில் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தின் சவுதியா கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் முதியவர் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர்.
இதில், அந்த நபர் யானை தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது.
இதேபோல் அதே மாவட்டத்தின் திஹி கிராமத்தைச் சேர்ந்த பாசோ ஹான்ஸ்தா என்ற பெண், தன் வீட்டில் உறங்கியுள்ளார். அப்போது, அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வந்த யானை ஒன்று, அவரது வீட்டை தாக்கியது.
இதில், வீட்டின் சுவர் இடிந்து பாசோ மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது போன்ற சம்பவங்களை தடுக்கக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமரசம் செய்த போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

