sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கெஜ்ரிவால் கைது: டில்லி உட்பட பல மாநிலங்களில் போராட்டம்

/

கெஜ்ரிவால் கைது: டில்லி உட்பட பல மாநிலங்களில் போராட்டம்

கெஜ்ரிவால் கைது: டில்லி உட்பட பல மாநிலங்களில் போராட்டம்

கெஜ்ரிவால் கைது: டில்லி உட்பட பல மாநிலங்களில் போராட்டம்


ADDED : மார் 22, 2024 11:24 PM

Google News

ADDED : மார் 22, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி,:டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தலைநகர் டில்லியில் நேற்று, ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் போராட்டம் நடத்தினர். அமைச்சர்கள் அதிஷி சிங் மற்றும் சவுரவ் பரத்வாஜ் உட்பட அக்கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

டில்லி அரசின் 2021- 2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சி.பி.ஐ., விசாரிக்க டில்லி கவர்னர் சக்சேனா உத்தரவிட்டார். விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா உட்பட 12 பேரை கைது செய்தது.

மேலும், இந்த முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. அமலாக்கத் துறையும் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரை கைது செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து இதுவரை, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை, 9 முறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஆனால், அத்தனை சம்மன்களையும் கெஜ்ரிவால் நிராகரித்தார். இது சட்டவிரோதமானது என பதில் அளித்தார். இதுதொடர்பாக, அமலாக்கத் துறை டில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில், கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தன்னை கைது செய்யக்கூடாது எனக் கோரிக்கை விடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நேற்று முன் தினம் விசாரித்த உயர் நீதிமன்றம், கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

அதேநேரத்தில், சம்மன்கள் அனுப்புதவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை ஏப்.,22ல் விசாரிப்பதாக கூறியுள்ள நீதிபதிகள், இதுகுறித்து, இரண்டு வாரங்களுக்குள் பதில்மனு தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்குள் நேற்று முன் தினம் மாலை அதிரடியாக புகுந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் வீடு முழுதும் அதிரடி சோதனை நடத்தினர்.

கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தினர். அதன் முடிவில், நேற்று முன் தினம் இரவு, அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் அறிவித்தனர். அவரை, அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று புதுடில்லி, பஞ்சாப், ஹரியானா, ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தலைநகர் டில்லியில் ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ., அலுவலகம் அருகே ஐ.டி.ஓ., சந்திப்பில், அமைச்சர்கள் அதிஷி சிங் மற்றும் சவுரவ் பரத்வாஜ் ஆகியோர் தலைமயில் ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று காலை திரண்டனர்.

மத்திய அரசு மற்றும் பா.ஜ.,வைக் கண்டித்து கோஷமிட்டனர்.

ஏராளமானோர் திரண்டதால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கலைந்து செல்லும்படி போலீஸ் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால், அமைச்சர்கள் தலைமையில் கூடியிருந்த ஆம் ஆத்மி கட்சியினர் சாலையில் அமர்ந்து போரட்டத்தை தொடர்ந்தனர்.

இதையடுத்து, அமைச்சர்கள அதிஷி சிங், சவுரவ் பரத்வாஜ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து பேசிய அதிஷி சிங், “ஐ.டி.ஓ.,வில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய என்னை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர். டில்லி முதல்வரை பொய் வழக்குகளில் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இந்த ஜனநாயகப் படுகொலைக்கு தேர்தலில் மக்கள் பதில் அளிப்பர்,” என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் விஜயன், “டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு இருப்பது, எதிர்க்கட்சிகளின் குரலை அடக்குவதற்காகத்தான். தேர்தல் நடவடிக்கைகள் வேகமெடுக்கும் நேரத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்களை அடக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. ஜனநாயக நடைமுறைக்கு அஞ்சுபவோரின் கோழைத்தனத்தை இது காட்டுகிறது,”என, கூறியுள்ளார்.



கைது செய்ய இதுதான் நேரம்!

பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:ஊழல் அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் முதுகில் சொறிந்து கொள்வர். அமலாக்கத் துறை விசாரித்து வரும் முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் முக்கியமான சூத்திரதாரி. முதல்வர் பதவி வகிப்பவர் என்பதாலேயே அவரை விடுவிக்க வேண்டுமா? கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர்கள் இணைந்து குரல் கொடுக்கின்றனர். இது சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் திருடர்களின் குரல். ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் இந்த விஷயத்தில் பொய்களை பரப்பி வருகின்றனர். ஊழல் வழக்கில் சோனியாவும், ராகுலும் ஜாமினில் இருக்கின்றனர். மக்கள் நீதிமன்றங்களை நம்புவார்களா? அல்லது ஊழல் செய்தவர்களின் பேச்சை நம்புவார்களா? எல்லா திருடனுமே தான் நிரபராதி என்றுதான் கூறுகின்றனர்.இதே கெஜ்ரிவால்தான் ஒரு காலத்தில் சோனியா, ராகுல், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரை ஊழல்வாதிகள் எனக் கூறினார். இப்போது அவர்களுடன்தான் கூட்டணி அமைத்துள்ளார்.அரசியலை சுத்தப்படுத்தியதாகக் கெஜ்ரிவால் கூறுகிறார். ஆனால், சகல வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு பாதுகாப்புடன் தான் சுற்றிக் கொண்டிருந்தார்.ஊழல்வாதிகள் கைது செய்யப்பட வேண்டிய நேரம் இது.இதே வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்க மறுத்த உச்ச நீதிமன்றம், 338 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கூறியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.



ரகசிய நட்பு!

மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “திரிணமுல் காங்கிரஸ் அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், பா.ஜ., மற்றும் திரிணமுல் காங்., ஆகிய கட்சிகள் மறைமுக நட்பை தொடருகின்றன. எனவே, மேற்கு வங்காளத்தில் ஒருபோதும் இதுபோன்ற கைது நடவடிக்கைகளை பார்க்க முடியாது,”என்றார்.



பயத்தை தணிக்க...

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவருமான ஒமர் அப்துல்லா அறிக்கை:டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியுடன் நாங்கள் இணைந்து நிற்கிறோம். பா.ஜ., இந்த லோக்சபா தேர்தலில் 400கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என குறிவைத்து செயல்படுகிறது. ஆனால், தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால், எதிர்க்கட்சி முதல்வர்களை கைது செய்து தன் பயத்தை தணித்துக் கொள்கிறது.








      Dinamalar
      Follow us