sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆதரவற்ற மாடு கோ சாலையில் சேர்ப்பு

/

ஆதரவற்ற மாடு கோ சாலையில் சேர்ப்பு

ஆதரவற்ற மாடு கோ சாலையில் சேர்ப்பு

ஆதரவற்ற மாடு கோ சாலையில் சேர்ப்பு


ADDED : மே 25, 2024 01:32 AM

Google News

ADDED : மே 25, 2024 01:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல், தங்கவயலில் ஆதரவற்ற மாடு, கோசாலையில் சேர்க்கப்பட்டது.

தங்கவயலில் ஆதரவற்ற மாடுகள் சாலைகள், ரயில் நிலையங்கள், மருத்துவமனை, பூங்காக்கள், மைதானங்கள் உட்பட பல இடங்களில் இரவு நேரங்களில் காணப்படுகின்றன. மாடுகளின் உரிமையாளர் பராமரிக்க தவறுவதால், கண்ட, கண்ட இடங்களில் மேய்கின்றன.

சில மாடுகள், சாலைகளில் கேட்பாரற்று திரிவதால் விபத்துகளும் ஏற்படுகின்றன. சில மாடுகள் ரயிலில் சிக்கி பலியாவதும் உண்டு.

இதுபோன்று காணப்பட்ட ஒரு மாட்டை, சாமிநாதபுரம் பகுதியில் மர்ம நபர்கள் கட்டிப்போட்டுள்ளனர். மூன்று நாட்களாக மாட்டுக்கு தண்ணீர், தீவனம் இல்லாமல் சோர்ந்து காணப்பட்டது. இந்த தகவல் 'வாய்ஸ் பார் வாய்ஸ்லஸ்' என்ற அமைப்பை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு சென்று, அந்த மாட்டுக்கு தண்ணீர் கொடுத்தார்.

இது குறித்து ராபர்ட்சன்பேட்டை போலீஸ் நிலையத்தில் தெரிவித்தார். போலீசார் ஒப்புதலுடன் பாரண்டஹள்ளி அருகே உள்ள காத்ரி கோசாலையில் மாடு ஒப்படைக்கப்பட்டது.

“மாட்டின் உரிமையாளர், போலீசில் ஆதாரத்தை காண்பித்து தடையில்லா சான்று பெற்று, கோசாலையில் இருந்து மீட்டுச் செல்லலாம்,” என, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us