sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

உணவு பொருள் பாக்கெட் முன்பக்கத்தில் ஊட்டச்சத்து லேபிள் கட்டாயம்

/

உணவு பொருள் பாக்கெட் முன்பக்கத்தில் ஊட்டச்சத்து லேபிள் கட்டாயம்

உணவு பொருள் பாக்கெட் முன்பக்கத்தில் ஊட்டச்சத்து லேபிள் கட்டாயம்

உணவு பொருள் பாக்கெட் முன்பக்கத்தில் ஊட்டச்சத்து லேபிள் கட்டாயம்


ADDED : ஜூலை 15, 2025 11:45 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:நுகர்வோர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், உணவுப்பொருள் பாக்கெட்டின் முன்பக்கத்தில், ஊட்டச்சத்து லேபிள் இடம்பெறச் செய்யுமாறு, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து சிவசேனா எம்.பி.,யும், பார்லி., துணை நிலை கமிட்டியின் தலைவருமான மிலிந்த் தியோரா தெரிவித்துள்ளதாவது:

உணவு பொருள் பாக்கெட்டின் முன்பக்கத்தில், ஊட்டச்சத்து லேபிள் இடம்பெறுவதை அமல்படுத்துமாறு எப்.எஸ்.ஏ.ஏ.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பார்லி., துணைநிலை சட்ட குழுவின் தலைவராக, சிங்கப்பூரின் ஏ டூ டி நியூட்ரி கிரேடு அமைப்பை பரிந்துரை செய்திருந்தேன்.

இந்தியாவில் உடல்பருமனால் பாதிக்கப்படுவோர் அதிகரித்து வரும் நிலையில், நுகர்வோர் ஆரோக்கியமான வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கும் வகையில், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தாமதமின்றி இதை அமல்படுத்த வேண்டும்.

ஜிலேபி, சமோசா உடல்நல கேடு குறித்து எச்சரிக்கை வாசகங்கள், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் அரசின் முடிவை வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உடல் பருமன், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம், வாழ்க்கை முறை தொடர்பான பிரச்னைகளுக்கு சமீபத்தில் சமோசா, ஜிலேபி, பக்கோடா வழிவகுக்கும் என சமீபத்தில் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இவற்றில் இடம்பெற்றுள்ள சர்க்கரை மற்றும் எண்ணெய் அளவை பள்ளிகள், அலுவலகங்கள், மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் எச்சரிக்கை வாசகத்துடன் இடம்பெற செய்ய வேண்டுமென உத்தரவிட்டு இருந்தது.






      Dinamalar
      Follow us