ADDED : ஜூன் 02, 2026 07:07 AM
அ நிறம் | அளவு
பங்கு வெளியிடும்
'சிம்பிள் எனர்ஜி'
பெங்களூருவை சேர்ந்த மின்வாகன நிறுவனமான 'சிம்பிள் எனர்ஜி' 2027 -28ம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் பொது பங்குகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
2029 - 30ம் நிதியாண்டுக்குள் 3,000 கோடி ரூபாய் வருவாய் இலக்கை அடைவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி இந்நிறுவனம் மாதம் 1,500 வாகனங்களை விற்பனை செய்கிறது. இதை 2027க்குள் 10,000 வாகனங்களாக உயர்த்த இலக்கு வைத்துள்ளது.
சென்னை, பெங்களூரு உள்ளிட 38 நகரங்களில் விற்பனை செய்து வருகிறது. மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
