sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

வங்கி மற்றும் நிதி

/

ஏற்றுமதியாளர்களுக்கு கடன் தர அதிக கேள்விகள் கேட்கும் வங்கிகள்

/

ஏற்றுமதியாளர்களுக்கு கடன் தர அதிக கேள்விகள் கேட்கும் வங்கிகள்

ஏற்றுமதியாளர்களுக்கு கடன் தர அதிக கேள்விகள் கேட்கும் வங்கிகள்

ஏற்றுமதியாளர்களுக்கு கடன் தர அதிக கேள்விகள் கேட்கும் வங்கிகள்


ADDED : ஆக 12, 2025 07:11 AM

Google News

ADDED : ஆக 12, 2025 07:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்திய பொருட்களுக்கான அமெரிக்க வரி விதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து, ஏற்றுமதியாளர்களிடம் இருந்து வரும் புதிய கடன் விண்ணப்பங்கள் மற்றும் கடன் புதுப்பிப்புகளை இந்திய வங்கிகள் அதிகளவில் ஆய்வு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக, ப்ளூம்பெர்க் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது:

அமெரிக்காவுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யும் துறைகளான ஜவுளி, நவரத்தினம் மற்றும் ஆபரணத் துறைகள் இத்தகைய ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. கடனில் சிக்கி தவிக்கும் நிறுவனங்கள், கடந்த காலங்களைப் போன்று வங்கிகளில் நிதி நெருக்கடிக்கு வழிவகுத்துவிடுமோ என்ற அச்சம் வங்கிகளிடம் உள்ளது.

நிறுவனங்களின் வருவாயில் அமெரிக்காவின் பங்கு எவ்வளவு என்பதை ஆராய்ந்து, அதிகம் பாதிப்படையக்கூடிய வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு வருகின்றன. மேலும், புதிய நிதி திட்டங்களை சரிபார்க்கும் போது அல்லது புதுப்பிக்கும்போது வங்கிகள் கடன் வாங்குபவர்களிடம் அதிகப்படியான கேள்விகளை கேட்பதாக தொழில்துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.

இது இந்திய ஏற்றுமதியை மேலும் பாதிப்படையச் செய்யும் என அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தெரிவித்துஉள்ளது.

தொழில்துறையினர் கோரிக்கை  வங்கிகள் வட்டியை குறைக்க வேண்டும்  ஆறு மாதங்களுக்கு வட்டியை ஒத்தி வைக்க வேண்டும்  கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அளவை நீட்டிக்க வேண்டும்  மூலப்பொருள் இறக்குமதி வரியை நீக்க உதவ வேண்டும்.








      Dinamalar
      Follow us