sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு பயங்கரவாதிகளிடம் விசாரணை 

குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு பயங்கரவாதிகளிடம் விசாரணை 

குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு பயங்கரவாதிகளிடம் விசாரணை 


ADDED : ஆக 27, 2025 10:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2025 10:49 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு : மங்களூரு குக்கர் குண்டு வெடித்த வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பயங்கரவாதிகள் இருவரிடம், ஈ.டி., அதிகாரிகள் விசாரித்து உள்ளனர்.

மங்களூரில் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த வழக்கில் ஷிவமொக்காவை சேர்ந்த முகமது ஷாரிக், யாசின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கை என்.ஐ.ஏ., விசாரிக்கிறது.

கைதான முகமது ஷாரிக், யாசினுக்கு வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்யப்பட்டது பற்றி, ஈ.டி., எனும் அமலாக்கத்துறையும் விசாரிக்கிறது. கடந்த 5ம் தேதி யாசின் வங்கிக் கணக்கில் இருந்த 29,176 ரூபாயை, ஈ.டி., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வெளிநாட்டில் இருந்து வந்த பணத்தில், குண்டு தயாரிக்க தேவையான பொருட்களை இருவரும் வாங்கியதும் தெரிந்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்ற ஈ.டி., அதிகாரிகள், இரண்டு மணி நேரத்திற்கு மேலாக முகமது ஷாரிக், யாசினிடம், வெளிநாட்டில் இருந்து பணம் வந்தது குறித்து விசாரித்து உள்ளனர். ஒரு சில கேள்விகளுக்கு பதில் அளித்த இருவரும், பல கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்காமல் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us