ADDED : ஏப் 16, 2026 03:58 AM
பெங்களூரு: ஆர்.பி.ஐ.,யில் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சித்தவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரின் நாகஷெட்டிஹள்ளி யில் வசிப்பவர் ரமேஷ், 45. இவர் கடந்த 9ம் தேதியன்று, நிருபதுங்கா சாலையில் உள்ள ஆர்.பி.ஐ., எனும் இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகத்துக்கு வந்தார். தன்னிடம் இருந்த 2,000 ரூபாய் மதிப்புள்ள 375 நோட்டுகளை கொடுத்து, தன் கணக்கில் 7.5 லட்சம் ரூபாய் செலுத்தும்படி கோரினார்.
வங்கி அதிகாரிகள் அந்த நோட்டுகளை ஆய்வு செய்தபோது, அவை கள்ள நோட்டுகள் என்பதை கண்டுபிடித்தனர்.
இது குறித்து, ஆர்.பி.ஐ., உதவி ஜெனரல் மானேஜர் பீம் ச வுத்ரி, ஹலசூரு கேட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார், ரமேஷை கைது செய்து, கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'இவருக்கு பின்னால், பெரிய நெட் ஒர்க் இருக்கலாம் என, சந்தேகிக்கிறோம். அந்த நோட்டுகளை அவரிடம் கொடுத்தது யார், எங்கு அச்சிடப்பட்டது என்பது குறித்து, தீவிரமாக விசாரணை நடத்துகிறோ ம்' என்றனர்.
