sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கர்நாடகா சாதனை புத்தகத்தில் ஜஸ்வந்த்

 கர்நாடகா சாதனை புத்தகத்தில் ஜஸ்வந்த்

 கர்நாடகா சாதனை புத்தகத்தில் ஜஸ்வந்த்


ADDED : மே 09, 2026 11:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2026 11:41 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்றைய காலத்தில் குழந்தைகள் பல விஷயங்களில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அசத்துகின்றனர். இவர்களில் ஒருவராக பெங்களூரின் ஜஸ்வந்த் உள்ளார். இவருக்கு, 9 வயது தான் ஆகிறது. இதற்குள் கர்நாடகா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளார்.

மஹாதேவபுராவில் உள்ள கீதாஞ்சலி வித்யாலயா பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஜஸ்வந்த், நமது நாட்டின் உள்ள அனைத்து மாநிலங்களின் தலைநகரங்கள், நாடுகளின் தலைநகரங்கள் பெயர்களை, 2.9 நிமிடங்களில் சொல்லி விடுகிறார்.

இவரது திறமையை அங்கீகரிக்கும் வகையில், ஜஸ்வந்த் திறமையை அவரது பெற்றோர் வீடியோ எடுத்து, கர்நாடகா சாதனை புத்தக அமைப்புக்கு அனுப்பினர். அவர்களும் வீடியோவை பார்த்த பின், நேரில் சென்று ஜஸ்வந்த் திறமையை பரிசோதித்தனர்.

தனது திறமை பரிசோதித்தவர்களே ஆச்சர்யப்படும் அளவுக்கு, ஜஸ்வந்த் செயல்பட்டதால், அவரது பெயரை கர்நாடகா சாதனை புத்தகத்தில் சேர்த்து உள்ளனர்.

இதுகுறித்து ஜஸ்வந்த் கூறுகையில், ''கர்நாடகா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறு வயதில் இருந்தே மாநிலங்கள், நாடுகளின் தலைநகரங்களை என் பெற்றோர் எனக்கு சொல்லி கொடுத்தனர். எனக்கு பெருமை கிடைக்க அவர்களே காரணம். பள்ளி ஆசிரியர்கள், சக மாணவர்களும் என்னை ஊக்குவித்தனர்,'' என்றார்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us