sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கோலாரில் டிச., 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

கோலாரில் டிச., 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

கோலாரில் டிச., 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்


ADDED : நவ 12, 2025 06:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2025 06:38 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

முல்பாகல்: ''கோலார் மாவட்டத்தில் டிசம்பர் 1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம். தவறினால் பைக்குகள் பறிமுதல் செய்து, அபராதம் வசூலிக்கப்படும்,'' என, கோலார் எஸ்.பி. நிகில் தெரிவித்தார்.

முல்பாகலின் கிராம போலீஸ் நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:

சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. ஹெல்மெட் அணியாமல் வாகனங்கள் ஓட்டுவதால், விபத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. விழிப்புணர்வு மேற்கொண்ட போதிலும், யாரும் ஒரு பொருட்டாகவே கருதுவதாக தெரியவில்லை.

ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது நாடு முழுதும் உள்ள சட்டமாகும். ஆனால் கோலார் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் அலட்சியம் செய்கின்றனர்.

டிசம்பர் 1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம். தவறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும்.

இன்றைய இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில் சாகசம் செய்து வருகின்றனர். சைலென்சர் இல்லாமல் வாகனங்கள் இயக்கி சத்தம் எழுப்பி பிறருக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். அத்தகையோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us