sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'நிலத்தடி நீரை மறந்து விடுங்கள்... வழிந்தோடுவதை பயன்படுத்துங்கள்!'

 'நிலத்தடி நீரை மறந்து விடுங்கள்... வழிந்தோடுவதை பயன்படுத்துங்கள்!'

 'நிலத்தடி நீரை மறந்து விடுங்கள்... வழிந்தோடுவதை பயன்படுத்துங்கள்!'


ADDED : ஏப் 21, 2026 02:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2026 02:49 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''நிலத்தடி நீரை மறந்துவிடுங்கள், மேற்பரப்பு வழிந்தோடும் நீரைப் பயன்படுத்துங்கள்,'' என, கர்நாடக நிலத்தடி நீர் ஆணையத்தின் ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினரும் நீரியல் வல்லுநருமான கே.சி.சுபாஷ் சந்திரா வலியுறுத்தினார்.

நீர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், நீர் நிலைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பெங்களூரில் லைப்டைட் திரைப்பட விழா நடைபெற்றது. ஏப்ரல் 4ம் தேதி முதல் 19ம் தேதி வரை கலை மற்றும் கலாசார விழாவாக இது நடத்தப்பட்டுள்ளது.

'இயக்கத்திலுள்ள நீர்' என்ற கருப்பொருளில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தத் திரைப்பட விழாவில், நாடு தழுவிய தண்ணீர் பற்றாக்குறையைச் சித்தரிக்கும் ஏழு ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன.

ஆவணப்படம் அதிக நீர் தேவைப்படும் பயிரான வெங்காயத்தைப் பயிரிடுவதற்காகவும், நிலம் குத்தகைக்கு எடுப்பதற்காகவும் மால்வா பீடபூமிப் பகுதியிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான செல்வந்த விவசாயிகள் வரும் நர்மதா பள்ளத்தாக்கின் எளிதில் பாதிப்படையக்கூடிய நீரியல் புவியியல் பகுதியை மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயியான லட்சுமிநாராயண் தேவதா இயக்கிய 'பி பார் பியாஸ், பி பார் பைசா, பி பார் பானி' என்ற ஆவணப்படம் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தியது.

நிறைவு நிகழ்ச்சியின் ஒருபகுதியாக கர்நாடக நிலத்தடி நீர் ஆணையத்தின் ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினரும் நீரியல் வல்லுநருமான கே.சி.சுபாஷ் சந்திரா பேசியதாவது:

கோடை காலங்களில் பெங்களூரு தொடர்ந்து தண்ணீர் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. நிலத்தடி நீர் அதிகப்படியாக உறிஞ்சும் நிலை நீடித்து வருகிறது. இது முற்றிலும் வறண்டு போகும் என்ற அச்சம் நிலவும் நிலையிலும் அதைச் சார்ந்திருப்பதை நம்மால் தவிர்க்க முடியவில்லை.

வண்டல் மண் நிலத்தடி நீரை மறந்துவிடுங்கள். அது ஒரு நீடித்த வளம் அல்ல. பெங்களூரில் மேற்பரப்பு வழிந்தோடும் நீரில் கிட்டத்தட்ட 25 சதவீதம் ஏற்கனவே மாசடைந்துள்ள கழிவுநீர்க் கால்வாய்களில் வடிகிறது. ஏரிகளுக்கு நன்னீர் கிடைப்பதில்லை. மேலும் வண்டல் மண் காரணமாக அவற்றின் நீர் தாங்கும் திறனும் குறைந்து விட்டது.

நகரில் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பைக் கட்டாயமாக்க வேண்டும். நகரின் மழைப்பொழிவுத் தரவுகளின்படி, ஒரே மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பில் இருந்து 80,000 கன மீட்டர் தண்ணீரை நாம் சேமிக்க முடியும்.

பல ஆண்டுகளாக நிலத்தடி நீர் நகரத்திற்குப் பயன்பட்டது. ஆனால் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாடற்ற சுரண்டல், அதை வற்றச் செய்துவிட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us