sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

மின் கசிவால் தீ விபத்து 48 ஆடுகள் கருகி பலி

/

மின் கசிவால் தீ விபத்து 48 ஆடுகள் கருகி பலி

மின் கசிவால் தீ விபத்து 48 ஆடுகள் கருகி பலி

மின் கசிவால் தீ விபத்து 48 ஆடுகள் கருகி பலி


ADDED : ஆக 26, 2025 02:54 AM

Google News

ADDED : ஆக 26, 2025 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கபல்லாபூர்: கம்மரவாரிபள்ளி கிராமத்தில், கொட்டகையில் தீப்பிடித்ததில், விவசாயிக்கு சொந்தமான 48 ஆடுகள் தீக்கிரையாகின.

சிக்கபல்லாபூர் மாவட்டம், பாகேபள்ளி தாலுகாவின், திம்மம்பள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கம்மரவாரிபள்ளி கிராமத்தில் வசிப்பவர் விவசாயி மஞ்சுநாத். இவர் ஆடுகள் வளர்க்கிறார் .

வீட்டு முன் உள்ள ஓலை கொட்டகையில் ஆடுகளை அடைத்து வைத்திருந்தார். நேற்று முன்தினம் மாலையில், மஞ்சுநாத் வீட்டில் இருந்த, 'டிவி'யில் மின் கசிவு ஏற்பட்டு, தீப்பொறி ஆடுகள் இருந்த ஓலை கொட்டகை மீது விழுந்து தீப்பிடித்தது. சில நிமிடங்களில் தீ கொட்டகை முழுதும் பரவியது.

தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர். ஆனால், அதற்குள் 48 ஆடுகள் கருகி உயிரிழந்தன. இதில் மஞ்சுநாத்துக்கு 4.8 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் தீப்பிடிக்கவில்லை. பெஸ்காம் அதிகாரிகள், சம்பவம் நடந்த இடத்தை, நேற்று பார்வையிட்டனர்.






      Dinamalar
      Follow us