sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தேர் சக்கரம் ஏறி பக்தர் மரணம்

 தேர் சக்கரம் ஏறி பக்தர் மரணம்

 தேர் சக்கரம் ஏறி பக்தர் மரணம்


ADDED : ஏப் 24, 2026 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 04:21 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பீதர்: பீதரில் பசவேஸ்வரா ரத உத்சவத்தின் போது, கீழே விழுந்த பக்தர் மீது தேர் சக்கரம் ஏறியதில், இரு கால்களை இழந்தவர் உயிரிழந்தார்.

பீதர் மாவட்டம் பசவகல்யாண் நகரில் பசவேஸ்வர ரத உத்சவம் நடந்தது. இவ்விழாவுக்கு, அண்டை கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பெருமளவில் வருகை தந்திருந்தனர்.நேற்று காலை 6:30 மணியளவில் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், கால் தவறி கீழே விழுந்த அதே பகுதியை சேர்ந்த தன்ராஜ், 45, என்பவரின் இரு கால்களிலும் தேரின் சக்கரங்கள் ஏறியதில், இரு கால்களும் துண்டானது.

ரத்தம் வெளியேறிய நிலையில், மயக்கம் அடைந்தார். அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு, அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு முதலுதவி அளித்து, கலபுரகி மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறினர்.

ஆனால் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஐ.சி.யூ.,வில் தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று மாலை உயிரிழந்தார். இவருக்கு மனைவி, இரு குழந்தைகள், பெற்றோர் உள்ளனர்.

போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us