sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சி.எம்., ரேசில் அமைச்சர்கள் பா.ஜ., அசோக் விமர்சனம்

 சி.எம்., ரேசில் அமைச்சர்கள் பா.ஜ., அசோக் விமர்சனம்

 சி.எம்., ரேசில் அமைச்சர்கள் பா.ஜ., அசோக் விமர்சனம்


ADDED : ஏப் 15, 2026 03:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 03:24 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: ''அடுத்த இரண்டு ஆண்டுகளிலும் முதல்வர் பதவி தொடர்பான சண்டையே தொடரும். அமைச்சர்கள் பலரும் சி.எம்., ரேசில் புதிதாக இணைவர். இதனால், மக்கள் பெரிதாக பாதிக்கப்படுவர்,''என எதிர்க்கட்சி தலைவர் அசோக் விமர்சனம் செய்து உள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:

முதல்வர் மாற்றத்துக்கான காலக்கெடு கடந்த நவம்பரிலே முடிந்து விட்டது.

முதல்வர் மாற்றம் என்பது தற்போது காலாவதியாகி விட்டது. மாநில அரசு செத்துவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநிலத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. முதல்வர் பதவிக்கான சண்டை மட்டுமே நடக்கிறது. 30 எம்.எல்.ஏ.,க்கள் டில்லிக்கு சென்று உள்ளனர். அரசு சரியாக நடக்கவில்லை; ஆட்சியாளர்களும் சரியில்லை.

காங்கிரஸ் தலைவர் சிவகுமாரின் எச்சரிக்கையை மீறி எம்.எல்.ஏ.,க்கள் டில்லிக்கு பயணித்தனர். இதன் மூலம், அவர் வார்த்தைக்கு மரியாதையில்லை என்பது தெளிவாக தெரிகிறது. காங்கிரசில் ஒற்றுமை இல்லை.

அடுத்த இரண்டு ஆண்டுகளிலும் முதல்வர் பதவி தொடர்பான சண்டையே தொடரும். அமைச்சர்கள் பலரும் சி.எம்., ரேசில் புதிதாக இணைவர். இதனால், மக்கள் பெரிதாக பாதிக்கப்படுவர்.

இதுவே, பா.ஜ.,வின் ஆட்சி அமைந்திருந்தால் நல்லாட்சி அமைந்திருக்கும். பிரதமர் மோடி கை காட்டும் நபரே முதல்வராக ஆகியிருப்பார். இதனால், பிரச்னைகள் எதுவும் நடந்திருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us