sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 ஜனாதிபதி பெயரில் போலி வீடியோ; மோசடிக்கு முயன்றவர் மீது வழக்கு

/

 ஜனாதிபதி பெயரில் போலி வீடியோ; மோசடிக்கு முயன்றவர் மீது வழக்கு

 ஜனாதிபதி பெயரில் போலி வீடியோ; மோசடிக்கு முயன்றவர் மீது வழக்கு

 ஜனாதிபதி பெயரில் போலி வீடியோ; மோசடிக்கு முயன்றவர் மீது வழக்கு


ADDED : டிச 22, 2025 05:38 AM

Google News

ADDED : டிச 22, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசுவது போல ஏ.ஐ., மூலம் போலி வீடியோவை முகநுாலில் பதிவிட்டு பண மோசடியில் ஈடுபட முயன்றவர் மீது போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

குறைந்த பணம் முதலீடு செய்தால், அதிக லாபம் ஈட்டுவது குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசுவது போன்ற போலி வீடியோ முகநுாலில் பகிரப்பட்டு வந்தது.

இந்த வீடியோ ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 'டீப்பேக்' முறையில் போலியாக உருவாக்கப்பட்டது என்பதை மஹாலட்சுமி லே - அவுட் போலீஸ் நிலையத்தின் சமூக ஊடக கண்காணிப்பு பிரிவின் பொறுப்பாளர் ராகேஷ் கண்டுபிடித்து உள்ளார்.

இதையடுத்து, மஹாலட்சுமி லே - அவுட் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். வீடியோவை முகநுாலில் பகிர்ந்த அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வீடியோவை உண்மை என நம்பி யாராவது பணம் அனுப்பி ஏமாந்து போகலாம் என்பதால், அந்த வீடியோ முகநுாலில் இருந்து நீக்கப்பட்டது.

விசாரணை நடந்து வருவதாகவும், விரைவில் சைபர் குற்றவாளி கைது செய்யப்படுவார் எனவும் போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us