ADDED : ஏப் 26, 2026 12:23 AM
அ நிறம் | அளவு
கலபுரகி: பீதர் மாவட்டம் சித்தாபூர் தாலுகாவின் நலவாரா கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் தொட்டேந்திரா, சுனில். சகோதரி கணவரின் உறவினர்கள் திருமணத்துக்கு இருவரும் காரில் சென்றிருந்தனர்.
திருமண நிகழ்ச்சியை முடித்து கொண்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பீமல்லி கிராமத்தின் வழியாக வரும் போது, சாலையின் குறுக்கே ஆட்டோ நிறுத்தப்பட்டிருந்தது. காரில் அமர்ந்தபடி, ஆட்டோவை ஓரமாக நிறுத்தும்படி கேட்டுக் கொண்டனர். அப்போது அவருக்கும், அங்கிருந்த நான்கைந்து பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. சகோதரர்கள் இருவரும் சரமாரியாக தாக்கப்பட்டனர். இதை தடுக்க கிராமத்தினர் யாரும் முன்வரவில்லை.
காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
