sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ போக்குவரத்து போலீஸ்காரராக மாறிய பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார்

 போக்குவரத்து போலீஸ்காரராக மாறிய பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார்

 போக்குவரத்து போலீஸ்காரராக மாறிய பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார்


ADDED : நவ 19, 2025 08:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2025 08:22 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு ராஜாஜிநகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் குமார், போக்குவரத்து போலீஸ்காரராக நேற்று பணியாற்றினார். சாலை விதிகளை கடைப்பிடித்து வாகனம் ஓட்டும்படி, வாகன ஓட்டியருக்கு அறிவுரை கூறினார்.

பெங்களூரு ராஜாஜிநகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் குமார், 70. நேற்று காலை பாஷ்யம் சதுக்கம் பகுதிக்கு வந்தார். அங்கிருந்த போக்குவரத்து போலீஸ் கூடாரத்திற்கு சென்ற அவர், பணியில் இருந்த போலீஸ்காரரிடம், “நான் சிறிது நேரம் போக்குவரத்து போலீஸ்காரராக வேலை செய்ய உள்ளேன்,” என்று கூறினார்.

போக்குவரத்து போலீசார் அணியும் ஜாக்கெட் அணிந்து கொண்டார். சாலை விதிகளை மீறி, வாகன ஓட்டியர் வாகனங்களை ஓட்டுகிறார்களா என்று கண்காணித்தார். போக்குவரத்து விதிகளை மீறிய, வாகன ஓட்டியருக்கு, “சாலை விதிகளை கடைப்பிடியுங்கள்,” என, அறிவுரை கூறினார்.

பின், அவர் அளித்த பேட்டி:

பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, போக்குவரத்து போலீசார் எதிர்கொள்ளும் சவால்களை நான் நேரடியாக அனுபவித்து உள்ளேன்.

நீண்ட நாட்களாக இந்த பணியை செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது.

இதற்காக போக்குவரத்து இணை கமிஷனர் கார்த்திக் ரெட்டியின் அனுமதி பெற்றேன். ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுவது; மொபைல் பேசியபடி வாகனம் ஓட்டுவது; நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்துவது, பொதுமக்களிடம் நிரந்தர மனநிலையாக மாறிவிட்டன.

நான் கவனித்த பல வாகனங்களின் ஓட்டுநர்கள், சிக்னல்களில் பாதசாரிகள் கடக்கும் இடத்தில் கொண்டு வந்து வாகனத்தை நிறுத்துகின்றனர். விதிகளை மீற வேண்டாம் என்று அறிவுறுத்தினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us