sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

மாநிலத்தில் 13 நிறுவனங்கள் ரூ.27,607 கோடி ரூபாய் முதலீடு

/

மாநிலத்தில் 13 நிறுவனங்கள் ரூ.27,607 கோடி ரூபாய் முதலீடு

மாநிலத்தில் 13 நிறுவனங்கள் ரூ.27,607 கோடி ரூபாய் முதலீடு

மாநிலத்தில் 13 நிறுவனங்கள் ரூ.27,607 கோடி ரூபாய் முதலீடு


ADDED : அக் 25, 2025 05:20 AM

Google News

ADDED : அக் 25, 2025 05:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடகாவில் 13 நிறுவனங்கள் 27,607 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.

பெங்களூரு விதான் சவுதாவில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாநில உயர்மட்ட திட்ட அனுமதி குழுவின் கூட்டம் நடந்தது. முதல்வர் சித்தராமையா தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் முடிந்த பிறகு தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறியதாவது:

கர்நாடகாவில் 13 நிறுவனங்கள் 27,607 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் வளர்ந்த மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று. எனவே, புதிய முதலீடுகள், திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க காலம் தாழ்த்தப்படாது. புதிய நிறுவனங்கள் துவங்குவதற்கு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்.

தங்கள் தொழில்களை புதிய நிறுவனங்கள் துவங்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்பு துறையினர் விரைந்து அனுமதி அளிக்க வேண்டும். அனுமதி வழங்க காலம் தாழ்த்த கூடாது. காலம் தாழ்த்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 2024 - 25 நிதியாண்டில் கே.எஸ்.டி.எல்., எனும் கர்நாடகா சோப்பு மற்றும் டிடெர்ஜன்ட்ஸ் நிறுவனம் 1,700 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. இதில், 451 கோடி ரூபாய் லாபம் மட்டுமே.

இந்த லாபத்தில் 30 சதவீதம் அதாவது, 135 கோடி ரூபாய் மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினேன். கே.எஸ்.டி.எல்., வருவாய் ஈட்டுவதில் புதிய சாதனையை படைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us